காவிரி போட்ட மாஸ்டர் பிளான்.. உண்மையை உளறிய வெண்ணிலா, வெளியே வரும் விஜய் – Cinemapettai

Tamil Cinema News

[

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ராகினி பசுபதி போட்ட சூழ்ச்சியில் விஜய் சிக்கிக்கொண்டு தற்போது போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். வெண்ணிலா மூலம் கேஸ் ஸ்ட்ராங்காகி விஜய் வெளியே வராதபடி உள்ளே இருக்க வேண்டும் என்று பசுபதி வெண்ணிலாவின் மாமாவை தூண்டி விடுகிறார். இதனால் போலீஸ் விஜய் மீது எஃப்ஐஆர் போனதற்கு தயாராகி விட்டார்கள்.

இன்னொரு பக்கம் எப்படியாவது விஜய்யை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கூட்டிட்டு வர வேண்டும் என்று தாத்தா மற்றும் காவிரி முயற்சி எடுக்கிறார்கள். அந்த வகையில் அஜயின் அம்மாவிடம் பார்த்து பேசி போலீஸ் ஸ்டேஷனில் உண்மை வந்து சொல்லிட்டாங்க என்றால் விஜய் மீது எந்த தவறும் இல்லை என்று போலீஸ் விட்டு விடுவாங்க என்று நம்புகிறார்கள்.

அதனால் அஜய்யின் அம்மா வீட்டிற்கு காவிரியும் தாத்தாவும் போயி உண்மையை சொல்ல சொல்லி கெஞ்சுகிறார்கள். ஆனால் அஜய்யின் அம்மா நான் ஏதாவது உண்மை சொல்லிவிட்டால் என் பையனும் ராகினியும் சந்தோஷமாக வாழ மாட்டாங்க. அதனால் என் வீட்டுக்காரரும் பையனும் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரக்கூடாது எதையும் சொல்ல கூடாது என்று சொல்லிவிட்டு தான் போயிருக்காங்க.

அதனால் எப்படியாவது நீங்க விஜய்யை வேறு ஏதாவது முயற்சி பண்ணி வெளியே கூட்டிட்டு வாங்க என்று சொல்லி விடுகிறார். பிறகு காவிரி கிளம்பும்பொழுது உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா நிச்சயம் நீங்கள் போலீஸ் ஸ்டேஷனில் வந்து விஜயை காப்பாற்றுவீங்க என சொல்லிவிட்டு தாத்தாவை கூப்பிட்டு கிளம்பி விடுகிறார். அப்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு இவர்கள் வரும்பொழுது தாத்தாவுக்கு லாயர் போன் பண்ணி விஜய் மீது கேஸ் ஃபைல் பண்ண போகிற விஷயத்தை சொல்கிறார்.

உடனே தாத்தா நான் வந்து வெண்ணிலாவின் மாமாவிடம் பேசுகிறேன் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வெண்ணிலாவின் மாமாவிடம் பேசுகிறார். ஆனால் பசுபதி மறைமுகமாக சைகை காட்டி சில விஷயங்களை சொல்வதால் வெண்ணிலாவின் மாமா தாத்தா சொல்வதை கேட்காமல் விஜய் மீது தவறு இருப்பது போல பேசுகிறார். இதையெல்லாம் பார்த்த காவேரி இனியும் இவர்களை நம்பினால் வேலைக்காகாது என்று களத்தில் இறங்கி விட்டார்.

அந்த வகையில் பொருட்காட்சியில் காவிரிக்கு உதவி செய்த விஜயின் ஆட்கள் ஒருவர் மூலம் காவேரி மாஸ்டர் பேன் போட்டு விட்டார். அதன்படி வெண்ணிலாவிடம் தனியாக பேசும் காவிரி உனக்கு விஜய் கல்யாணம் பண்ண வேண்டும் அவ்வளவு தானே. கல்யாணம் பண்ணிவிட்டால் இந்த பிரச்சனையே இதோட விட்டுவிட்டு கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்கிடவியா என்று கேட்கிறார்.

உடனே வெண்ணிலாவும் சரி என்று சொல்லிய நிலையில் வெண்ணிலா அவருடைய வாயாலயே நடந்த உண்மையை காவிரியிடம் உலறுகிறார். இதை காவிரி சொன்னபடி ஐயப்பன் என்பவர் மறைமுகமாக வீடியோ எடுத்து விடுகிறார். பிறகு இந்த வீடியோ சாட்சியை வைத்து போலீஸிடம் காட்டிவிட்டு விஜய் மீது எந்த தவறும் இல்லை என்று காவேரி நிரூபித்து விடுகிறார். அந்த வகையில் விஜய் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கெத்தாக வெளியே வந்து விடுவார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.