புது சீரியலுக்காக நேரத்தை எல்லாம் மாற்றிய சேனல்.. வரும்போதே அடித்த ஜாக்பாட் – Cinemapettai

Tamil Cinema News

[

Serial: சின்னத்திரை பொருத்தவரை சீரியல் என்ன தான் நன்றாக இருந்தாலும் அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தை பொறுத்தே மக்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெறும். அதிலும் சாயங்கால நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு தான் அதிக முக்கியத்துவம் கிடைக்கும்.

ஏனென்றால் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வீட்டு வேலைகளை முடித்து சாயங்காலம் ஓய்வெடுக்கும் நேரமாக இருப்பதால் அந்த நேரத்தில் சீரியல்கள் வந்தால் அதை ஒவ்வொன்றாக பார்ப்பது வழக்கம். அதனால் ஆர்டிஸ்ட்கள் பிரைம் டைமிங் இல் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

ஏனென்றால் அப்பொழுதுதான் மக்களை கவர்ந்து அவர்களிடம் பிரபலமாக முடியும் என்பதால். அப்படி புது சீரியல் ஒன்று வரும் பொழுது பிரைம் டைமில் ஒளிபரப்பாக போகிறது. முக்கியமாக அந்த ஒரு சீரியலுக்காக ஏற்கனவே ஒளிபரப்பாகி வருகின்ற அனைத்து சீரியல்களின் நேரத்தை எல்லாம் மாற்றி இருக்கிறது,

அப்படி புதுசாக வரப்போகும் சீரியல் என்னவென்றால் ஜீ தமிழில் அயலி என்கிற ஒரு கதை. இந்த சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது. அந்த வகையில் இனி தினந்தோறும் 6 மணிக்கு மாரி, 6.30 மணிக்கு வீரா, 7 மணிக்கு கெட்டி மேளம் இந்த சீரியல் வழக்கம் போல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக போகிறது.

இதனை அடுத்து 8 மணிக்கு அண்ணா சீரியலும், 8.30 புதுசாக வரும் அயலி, 9 மணிக்கு வழக்கம் போல் கார்த்திகை தீபம், 9.45 மணிக்கு சந்தியா ராகம் மற்றும் 10.30 நினைத்தாலே இனிக்கும் போன்ற சீரியல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக போகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.