பத்ரகாளியாய் மாறி நிற்கும் நந்தினி.. அம்பலமாகும் கதிர் பின்னிய சூழ்ச்சி வலை – Cinemapettai

Tamil Cinema News

அறிவுக்கரசியும், முல்லையும் சீர் செய்தால் வெட்டி போடுவேன் என்று பத்ரகாளியாய் நிற்கிறார் நந்தினி. ஒரு கட்டத்தில் அவரது தம்பி தாய்மாமன் சீர் செய்ய வராததால் இடிந்து போய் நிற்கிறார். கர்வத்தோடு அறிவும் முல்லையும் சீர் செய்ய வருகின்றனர்.

ஒரு பக்கம் குணசேகரன் ஜெயித்தது போல் மனதுக்குள் சந்தோஷத்தை மறைத்துக் கொண்டு இருக்கிறார். மறுபக்கம் விசாலாட்சி அம்மையார் தேள் போல் தன்னுடைய விஷத்தை கக்குகிறார். ஓவரா ஆடக்கூடாது என நந்தினி வசைபாடுகிறார்.

மருமகள் அனைவரும் செய்வதறியாது தோற்றுப் போய் நிற்கிறார்கள்.கதிர், ஞானம் குணசேகரன் 3 பேரும் எங்கள் அம்மா தான் மூத்தவர், அவர் ஒருவர் சீர் செய்தால் போதும் வேறு யாரும் தேவையில்லை என்று எல்லாரையும் அடக்கி ஆள்கிறார்கள்.

நந்தினியின் தம்பி வராததால் விசாலாட்சி முதலில் தாராவிற்கு தண்ணீர் ஊற்றுகிறார். அதன் பின் முறைப்படி பார்த்தால் நந்தினியின் தாயார் தான் ஆசீர்வதிக்க வேண்டும். ஆனால் விசாலாட்சி, கதிர் இருவரும் அரசி மற்றும் முல்லையை சீர் செய்ய அழைக்கிறார்கள்.

இதனை சற்றும் எதிர்பாராத நந்தினியின் அப்பா மல்லு கட்டுகிறார். அரசி தாராவை நெருங்கி தண்ணீர் ஊற்ற முற்படுகிறார், சற்று எதிர்ப்பாராமல் நந்தினியின் தம்பி வந்து அனைத்தையும் தடுத்து நிறுத்தி தாய்மாமன் உறவை நிரூபித்துக் காட்டுகிறார். கதிர் தான் அவரை அடைத்து வைத்தார் என்பதை சொல்லாமல் கதிரை முறைத்தபடி நிற்கிறார் நந்தினியின் துபாய் தம்பி.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.