அருண் சீதா கல்யாணத்துக்கு ஆப்பு வைத்த விஜயா.. திருந்தாத முத்துவுக்கு அடிமையாக இருக்கும் மீனா – Cinemapettai

Tamil Cinema News

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் அம்மா சீதாவின் ஆசைப்படி அருணுக்கு கல்யாணம் பண்ணி வைத்துவிடலாம் என்பதற்காக முத்துவிடம் பேச வந்தார். ஆனால் முத்து எதையும் காது கொடுத்து கேட்காமல் தான் நினைச்சபடி தான் நடக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி மாமியாரிடம் பேசி அனுப்பி வைத்து விட்டார்.

உடனே வீட்டிற்கு வந்த முத்து, மீனாவிடம் உங்க அம்மாவை என்னிடம் பேச சொல்லி தூது அனுப்பினியா? நான் தான் அருண் கெட்டவன் நம்ம சீதாவுக்கு அவன் தேவை இல்லை என்று தெளிவாக சொல்லிவிட்டேன். ஆனாலும் சீதா, அருணை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பது சரியாக இல்லை என்று மீனாவிடம் சொல்கிறார்.

அதற்கு மீனா அருண் தவறானவன் என்பது உங்களை பொருத்தவரை தான், சீதாவுக்கு அருண் மீது நம்பிக்கையும் காதலும் அதிகமாக இருக்கிறது. மற்றவர்களின் காதலுக்கும் நாம் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று சென்டிமென்ட் ஆக பேசி முத்துவின் சம்மதத்திற்கு கெஞ்சுகிறார். ஆனால் முத்து பிடிவாதமாக இருந்த நிலையில் மீனா இதுவே எங்க அப்பா இருந்தாங்கன்னா மகளின் ஆசையே நிறைவேற்றி இருப்பாங்க.

இந்த அப்பா இல்லாதது இப்பொழுது தான் எங்களுக்கு மிகப்பெரிய இலக்காக இருக்கிறது என்று சொல்கிறார். உடனே முத்து செண்டிமெண்டாக பேசி என்னை தாக்க வேண்டாம். வேண்டுமென்றால் உங்க அப்பா ஆவியிடம் பேசக்கூடிய ஒரு சாமியாரை வரச் சொல்லி சீதா கல்யாண விஷயத்தை பற்றி கேட்கலாமா என்று சொல்லிய நிலையில் மீனா எதையும் பண்ணுங்க என்று சொல்லி போய் விடுகிறார்.

அடுத்ததாக விஜயா, பார்வதி வீட்டில் பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அருளின் அம்மா விஜய் அவை பார்த்து பேசுவதற்காக வருகிறார். ஆனால் விஜயா, போயும் போயும் அந்த குடும்பத்தில் பொண்ணு எடுக்குறீங்கனா உங்க பையனுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா அல்லது இரண்டாவது கல்யாணம் என்று தேவையில்லாத கேள்விகளை கேட்டு அருண் அம்மாவை டென்ஷன்படுத்தி சீதாவின் கல்யாணத்திற்கு ஆப்பிள் வைத்து விட்டார்.

இதனால் கோபப்பட்ட அருண் அம்மா, உங்களை மதித்துப் பேச வந்ததுக்கு எனக்கு தேவை தான் என்று திட்டி விட்டுப் போய் விடுகிறார். அடுத்ததாக வீட்டிற்கு ஒரு சாமியார் வந்ததும் முத்து, மீனா தான் வர சொல்லி இருப்பார் என்று வீட்டுக்குள் கூப்பிட்டு உட்கார வைக்கிறார். அப்படி வந்ததும் மீனா நான் யாரேனும் கூப்பிடவில்லை என்று சொல்லி இருந்தேன் பார்வதி நான் தான் கூட்டிட்டு வந்தேன்.

மனோஜ் காக உங்க அம்மா சாமியாரை பார்த்து பேச வேண்டும் என்று சொன்னார், அதனால் தான் கூட்டிட்டு வந்தேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே விஜயா, மனோஜ் வாயிலிருந்து கட்டை பிரித்து பேசுவதற்கு முயற்சி செய்ய சொல்கிறார். அப்படி மனோஜ் பேச ஆரம்பிக்கும் பொழுது அந்த சாமியார் சூடனை தூக்கி வாய்க்குள் போட்டு விடுகிறார். உடனே மனோஜ் கத்த ஆரம்பிக்கிறார்.

பிறகு மனோஜ்க்கு சரியான நிலையில் மறுபடியும் ரோகினி மனோஜ் வீக்னஸை புரிந்து கொண்டு மகேஷ் என்ற நபருடன் பேசுவது போல் டிராமாவை ஆரம்பித்து விட்டார். இதை நம்பி மனோஜும் பயப்பட ஆரம்பித்து விட்டார். இதெல்லாம் எங்க போய் முடிய போகிறது, சில சீரியல்கள் கதையை இல்லாமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சீரியலில் கதை இருந்தும் அதை கொண்டு போகாமல் சோதப்பிக்கொண்டு வருகிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.