மாமனாரை புரிஞ்சுகிட்ட நிலா, நடேஷனை ஒதுக்கும் மகன்கள்.. ஓவராக பீல் பண்ணும் பல்லவன் – Cinemapettai

Tamil Cinema News

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கு முதலில் பார்த்த பெண் எதோ ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறது ஆனால் அதை பற்றி சேரன் என்ன நம்மிடம் சொல்லவில்லை. அதனால் நாமளே பொண்ணு வீட்டுக்குப் போயி என்ன கண்டிஷன் என்று கேட்டு வரலாம் என தம்பிகள் முடிவு எடுத்து விட்டார்கள். ஆனால் நாம் போவதை விட சோழன் அண்ணாவும் நிலா நீயும் போயிட்டு வந்தால் சரியாக இருக்கும் என்று பல்லவன் சொல்லி விடுகிறார்.

அதன்படி நிலா சோழன் இருவரும் சேர்ந்து சேரனுக்கு முதலில் பார்த்த பெண் வீட்டிற்கு போகிறார்கள். அங்கே போய் பார்த்து பேசிய பிறகு அந்த குடும்பத்திற்கு சேரனை ரொம்ப பிடித்திருக்கிறது. ஆனால் சேரன் தனியாக வீடு எடுத்து தங்கினால் எங்கள் பெண்ணை கொடுக்கும் என்று சொல்லிவிட்டார்கள். இந்த விஷயத்தை கேட்டதும் சோழன் நாங்கள் வீட்டில் போய் கலந்து பேசிட்டு சொல்கிறோம் என கிளம்பி விடுகிறார்.

பிறகு வீட்டிற்கு வந்ததும் சோழன் மற்றும் நிலா பொண்ணு வீட்டார் போட்ட கண்டிஷனை பற்றி பல்லவன் மற்றும் பாண்டியனிடம் சொல்லுகிறார்கள். அதற்கு யாருக்கும் விருப்பம் இல்லை என்றாலும் அண்ணனுக்கு கல்யாணம் ஆகி சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் இந்த முடிவுக்கு நாம் சம்மதம் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று பாண்டியன் சொல்கிறார். இதுதான் சரி என்றும் சோழன் ஒத்துக் கொண்டார்.

ஆனால் பல்லவனால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அண்ணன் இல்லைனா இந்த வீடு வீடாக இருக்காது. யாருக்கும் இந்த வீட்டுக்கு வர பிடிக்காது என்று சொல்லி சின்ன குழந்தை மாதிரி அழ ஆரம்பித்து விட்டார். பிறகு அண்ணனுக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று மனச தேத்தி மூன்று பேரும் இந்த கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டார்கள். அத்துடன் பெண் வீட்டுக்கும் போன் பண்ணி கல்யாணத்திற்கு ஓகே என்று சொல்லிவிடுகிறார்கள்.

இந்த விஷயத்தை நடேசன் வந்ததும் நிலா சொல்லுகிறார், உடனே நடேசன் அப்படியே ஒவ்வொருத்தரா கல்யாணம் ஆகி போக வேண்டியது தானே என்று சொல்லிய நிலையில் நிலா கடைசியில் நீங்கள் தனியாக இருப்பீர்களா என கேட்கிறார். உடனே நடேசன், நான் ஏன் தனியாக இருக்கப் போகிறேன் எல்லாரும் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா நானும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வருவேன் என்று நக்கலாக சொல்கிறார்.

ஆனாலும் இந்த விஷயத்துக்கு சேரன் சம்மதிக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் நடேசன் இருக்கிறார். அத்துடன் தன்னை மகன்கள் மதிக்க மாட்டாங்க என்று நிலாவிடம் பீல் பண்ணி பேசுகிறார். ஆனால் நிலா மாமனாரை புரிந்து கொண்டு எல்லா விஷயத்தையும் சொல்லி குடிப்பதை நிறுத்தும் விதமாக சாதாரண மனுசனாக மாற்றுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி எடுத்து வருகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.