பாக்கியா கேட்ட கேள்வியால் இனியாவிற்கு பிறந்த விடிவு காலம்.. அடங்கிய சுதாகர் – Cinemapettai

Tamil Cinema News

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா புகுந்த வீட்டில் நிம்மதி இல்லாமல் அவஸ்தைப்படுகிறார் என்று தெரிந்து கொண்ட கோபி மற்றும் பாக்கியா, சுதாகர் வீட்டில் போய் மகளுக்கு நியாயம் கேட்கிறார்கள். அப்படி பேசும் பொழுது நித்தீஷ் மற்றும் பாக்யாவுக்கு இடையே வாக்குவாதம் வர ஆரம்பித்துவிட்டது. இதை பார்த்த சுதாகர் இரண்டு பேரையும் சமாதானப்படுத்திவிட்டு இனியாவின் சந்தோஷத்திற்கு பொறுப்பேற்று விடுகிறார்.

பிறகு வீட்டிற்கு வந்த பாக்கியம், என்னுடைய ரெண்டு ஹோட்டல் போன பொழுது என்னால் மறுபடியும் அதே மாதிரி ஹோட்டலை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் பெருசாக கஷ்டப்படாமல் விட்டுவிட்டேன், ஆனால் என் மகள் விஷயத்தில் அப்படி பொறுமையாக இருக்க மாட்டேன் என்று கோபி இடம் சொல்கிறார். உடனே கோபி, இனியாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் நானும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.

ஆனால் இதில் நாம் கொஞ்சம் பொறுமையாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லி பாக்யாவை தேற்றுகிறார். அடுத்ததாக சுதாகர் யோசித்துப் பார்த்த நிலையில் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி, இனியவை கூப்பிட்டு நீ முன்னாடி வேலை பார்த்த மாதிரி பத்திரிக்கை ஆபீசில் போய் வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று பெர்மிஷன் கொடுக்கிறார்.

இதை கேட்டதும் இனியாவிற்கு சந்தோசம், தன்னுடைய ஆசை நிறைவேறிவிட்டது என்ற நினைப்பில் பாக்யாவிற்கு ஃபோன் பண்ணி நன்றி சொல்கிறார். அந்த வகையில் இனியாவின் வேலைக்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது. அடுத்ததாக பாக்கியா, ஹோட்டலில் வந்த ஒரு தாத்தாவிற்கு இனிப்பு பலகாரத்தை பண்ணி செண்டிமெண்டாக பேசி விடுகிறார். இதை பார்த்த லோக்கல் கவுன்சிலர் பாக்கியாவின் ஹோட்டலில் எந்த பிரச்சனையும் பண்ணாமல் அமைதியாக போய்விடுகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.