செந்தில் செய்த முட்டாள்தனத்தால் மீனா மீது விழும் பழி.. 7 விஷயத்தில் ஏமாந்த பாண்டியன் – Cinemapettai

Tamil Cinema News

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சக்திவேல் வீட்டில் லட்சக்கணக்கில் இருக்கும் பணத்தை பார்த்து வாயடைத்து போன சுகன்யா வீட்டிற்கு வந்து பழனிவேலுமிடம் சொல்கிறார். இந்த வீட்டில் அஞ்சுக்கும் பத்துக்கும் கஷ்டப்படுறதுக்கு உங்க வீட்டிற்கு போனால் பணம் வசதியுடன் இருக்கலாம் என்று சொல்கிறார்.

இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகவில்லை, நீங்கள் நானும் அங்கேயே போயிடுமா என்று கேட்கிறார். அதற்கு அங்க பணம் இருந்து என்ன பிரயோஜனம், நல்ல மனசு எங்க அண்ணன்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் இங்கே நம்மளை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நல்லவங்க என்று சொன்னதும் சுகன்யா கோபத்தில் திட்ட ஆரம்பித்து விடுகிறார்.

இதையெல்லாம் பார்த்து மீனா, சுகன்யாவிடம் ஏன் சித்தப்பாவை திட்டுகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு சுகன்யா புருஷன் பொண்டாட்டி விஷயத்தில் முதலில் தலையிடுவதை நிறுத்துங்கள் என்று சொல்கிறார். உடனே மீனா, புருஷன் பொண்டாட்டி சந்தோஷமாக ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது தான் தலையிட கூடாது. அவர்களுக்குள் பிரச்சனை என்றால் அதைக் கேட்கலாம்.

அதுவும் நடுவீட்டில் வைத்து பேசினால் கேட்க தான் செய்வார்கள் என்று சொல்லி சுகன்யாவின் வாயை அடைத்துவிட்டார். பிறகு பழனிவேலு எனக்கு வெளியே வேலை இருக்கிறது என்று கிளம்பி விடுகிறார். அப்பொழுது சுகன்யாவிடம் சக்திவேல் வீட்டில் இருக்கும் பணத்தை பற்றி மீனா கேட்கிறார். இதை தெரிந்து கொண்டதும் மீனா யாருக்கும் தெரியாமல் இன்கம் டேக்ஸ் ஆபிஸ்க்கு போன் பண்ணி தகவலை சொல்லி விடுகிறார்.

அதனால் சக்திவேல் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பணத்தை மொத்தமாக அவர்கள் எடுத்துட்டு போய் விடுகிறார்கள். ஆனால் மீனா, வாக்கப்பட்ட குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். இன்னொரு பக்கம் செந்தில், அப்பாவே ஏமாற்றும் அளவிற்கு திருட்டு வேலையை பார்க்கிறார், அதாவது அரசி கல்யாணத்துக்கு கார் பரிசாக கொடுக்க வேண்டும் என்று 10 லட்ச ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து செந்திலை விட்டு எடுத்துட்டு வரச் சொன்னார்.

ஆனால் இப்பொழுது அந்த கல்யாணம் நடக்கவில்லை என்றதும் திருப்பி அதே பணத்தை வங்கியில் வைக்க சொல்லி பாண்டியன், செந்திலிடம் பணத்தை கொடுக்கிறார். செந்தில் இந்த விஷயத்தை மீனாவிடம் சொல்லி அப்பா கொடுத்த பணத்தை மாமாவிடம் கொடுத்து அரசாங்க வேலையே வாங்கிடலாமா என்று கேட்கிறார். அதற்கு மீனா லஞ்சம் கொடுத்து வேலை வாங்கிட முடியாது. நீங்கள் இப்படி யோசித்ததை தப்பு என்று சொல்லி பணத்தை மாமா சொன்ன மாதிரி வங்கியில் போட்டுட்டு வாங்க என சொல்கிறார்.

பிறகு செந்தில் பணத்தை எடுத்துட்டு போகும் பொழுது மனசு மாறி நேரடியாக மாமனார் வீட்டிற்கு சென்று மீனாவின் அப்பாவிடம் பத்து லட்ச ரூபாய் வேலைக்காக கொடுத்து விடுகிறார். கொடுத்துட்டு வந்து மீனாவிடம் சொல்கிறார், உடனே மீனா நீங்கள் செய்தது பெரிய தப்பு இப்பொழுதே மாமாவிடம் நடந்த விஷயத்தை சொல்லிவிடுங்கள் என சொல்கிறார். அதற்கு செந்தில் முடியாது என்று மறுத்து விடுகிறார்.

செந்திலை மீறி மீனாவும் உண்மையை சொல்ல வாய்ப்பில்லை. கடைசியில் இந்த பழி மீனா மீது தான் விழப்போகிறது. ஏற்கனவே செந்தில் கதிர் கல்யாண விஷயத்திலும் ஏமாந்து போய்விட்டார், அரசி கல்யாணத்திலும் ஏமாந்து விட்டார். இதற்கு இடையில் தங்கமயில் படிப்பு விஷயம், வயசு விஷயம் மற்றும் நகை விஷயத்திலும் ஏமாற்றி இருக்கிறார். தற்போது செந்திலும் பண விஷயத்தில் திருட்டு வேலையை செய்ததால் பாண்டியன் தொடர்ந்து ஏமாந்து கொண்டே இருக்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.