ரோகினி திருட்டுச் செயின், அவமானப்பட்ட விஜயா.. ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு மீனாவிடம் ஐடியா கொடுத்த அருண் – Cinemapettai

Tamil Cinema News

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், அருண் செய்த தப்பு திருட்டு செயின் கும்பலை கண்டுபிடிப்பதற்கு முத்துவும் உதவியாக இருந்தார் என்று எல்லோரிடமும் சொல்லி இருந்தால் போலீஸிடம் அவமானப்பட்டு இருக்கவும் வேண்டாம். முத்துவிடம் சமாதானம் ஆகி சீதாவை கல்யாணம் பண்ணுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இருந்திருக்கும்.

ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு திருட்டு கும்பலை கண்டுபிடித்தது நான் தான் என்று ஓவர் தெனாவட்டில் சொன்னதால் பிரமோஷனுக்கு ஆப்பு வந்துவிட்டது, முத்துவின் கோபமும் அதிகரித்துவிட்டது. இந்த விஷயத்தை அருண் அம்மா சொல்லி இனி சீதாவை நீ ஒரேடியாக மறந்திட வேண்டியதுதான். அதனால் நான் வேறு ஒரு பெண்ணை உனக்கு பார்த்து வைக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

இதற்கு இடையில் முத்து செய்த உதவினால் கிடைத்த ஒரு செயினை சீதாவுக்கு பரிசாக கொடுத்து வேறு ஒரு மாப்பிள்ளையை நான் உனக்கு நல்லா பார்த்து வைக்கிறேன் என்று சீதாவிடம் சொல்லிவிடுகிறார். அடுத்ததாக ரோகினி, பார்வதி மூலம் சாமியாரை வைத்து விஜயாவை மடக்குவதற்கும் பிளான் போட்டு விட்டார்.

ஆனால் அதற்குள் ரோகிணிக்கு பிரச்சனை ஆரம்பித்து விட்டது. அதாவது லோக்கல் ரவுடி இடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து ஒரு திருட்டுச் செயினை ரோகிணி வாங்கி அதை விஜயாவிடம் கொடுத்து ஐஸ் வைத்தார். அந்தச் செயின் விஜயா தற்போது போட்டுட்டு பரதநாட்டியம் ஆடுகிறார். விஜயா உடன் சேர்ந்து பல பெண்களும் பரதநாட்டியம் ஆடி ஒரு நிகழ்ச்சி போல் நடக்கிறது.

அப்பொழுது விஜயா ரோகினி கொடுத்த செயினை போட்டுட்டு வருகிறார். அப்பொழுது அங்கே வந்த ஒரு நபர் இது என்னுடைய செயின் என்று சொல்லி அதற்கு பின் இருக்கும் இனிஷியலையும் அடையாளமாக சொல்கிறார். இந்த செயின் என்னிடம் இருந்து திருட்டுப் போனது. திருடிய செயின் உங்களிடம் எப்படி வந்தது என்று எல்லோரும் முன்னாடியும் விஜயாவிடம் கேள்வி கேட்ட நிலையில் பதில் சொல்ல முடியாமல் விஜயா அவமானப்பட்டு நிற்கிறார்.

இதை வைத்து விஜயா, ரோகினிடம் பிரச்சனை பண்ண வாய்ப்பு இருக்கிறது. எப்படியாவது விஜயாவை சமாதானப்படுத்த வேண்டும் என்று யோசிக்கும் ரோகினிக்கு அடுத்தடுத்து ஆப்பு தயாராகிக் கொண்டே இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மனோஜும் ரோகினிடம் சண்டை போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக அருண், சீதா மற்றும் மீனாவுக்கு போன் பண்ணி ஒரு ஹோட்டலுக்கு வர சொல்கிறார். அப்படி அனைவரும் சந்தித்த நிலையில் அருண், மீனா மற்றும் சீதாவிடம் சொன்னது என்னவென்றால் அம்மா எனக்கு வேறொரு பெண்ணை பார்ப்பதற்கு தயாராகி விட்டார்கள். ஆனால் என்னால் சீதாவை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ண முடியாது.

அதனால் நான் சீதாவே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணலாம் என்று முடிவு பண்ணி விட்டேன். இதற்கு நீங்கள் தான் உதவி பண்ண வேண்டும் என்று மீனாவிடம் சொல்கிறார். சீதாவின் வாழ்க்கை யோசித்து அருண் சொன்ன ஐடியாவின் படி மீனா ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு உதவி செய்யப் போகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.