வீரா சீரியலை தொடர்ந்து விஜய் டிவிக்கு தாவிய அபி.. ராதிகாவுடன் கூட்டணியில் வரும் புது சீரியல் – Cinemapettai

Tamil Cinema News

Vijay Tv Serial: என்னதான் பெரிய பெரிய படங்கள் திரையில் வந்தாலும் தினமும் வீட்டில் இருந்தபடியே ரசித்துப் பார்க்கும்படி சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்குத்தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு புதுசு புதுசாக சீரியல்களை கொண்டு வருகிறார்கள்.

இதில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னும் பின்னும் ஆக அடுத்தடுத்து இருப்பது சன் டிவி சீரியல் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான். எப்படியாவது சன் டிவி சீரியலை விட அதிக புள்ளிகளை எடுத்து முதலில் வந்து விட வேண்டும் என்று விஜய் டிவி சேனல் போராடி வருகிறது.

அந்த வகையில் புதுசு புதுசாக சீரியல்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது மெல்ல திறந்து பேசு என்ற சீரியல் புதுசாக வரப்போகிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சீரியலும் புதுசாக வருகிறது. அதாவது நீ நான் காதல் என்ற சீரியலில் மூலம் அறிமுகமான வர்ஷினி, அபி என்ற கேரக்டர் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார்.

இந்த சீரியல் முடிந்த பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் ரீமேக்கை தெலுங்கில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார். இதில் இவருக்கு ஜோடியாக மாறன் கதாபாத்திரத்தில் மகாநதி சீரியலின் ஹீரோ சுவாமிநாதன் என்கிற விஜய் இணைந்து இருக்கிறார்.

இந்த சீரியலை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் மறுபடியும் நடிக்கும் விதமாக ரீமேக் சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் ஸ்டார்மா சேனலில் வரும் மகுவா ஓ மகுவா என்ற சீரியலை தமிழில் நடிக்க போகிறார். இதில் ஹீரோயினாக வர்ஷினி என்கிற அபி கமிட் ஆகி இருக்கிறார்.

இவரை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கேரக்டரில் நடித்த ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இணைந்திருக்கிறார். இந்த சீரியல் இன்னும் கூடிய விரைவில் விஜய் டிவியில் ஆரம்பமாக போகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.