சிங்கப்பெண்ணில் இருதலை கொள்ளியாய் தவிக்கும் ஆனந்தி.. கண் திறந்து அன்பு கேட்க போகும் அந்த ஒரு கேள்வி! – Cinemapettai

Tamil Cinema News

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்புவின் அம்மா இனி ஆனந்தி அவர்களுடைய வாழ்க்கையில் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்.

அதே நேரத்தில் அன்புவை ஒரு நாள் பார்க்காமல் இருந்ததிலேயே ஆனந்தி அவளுடைய மொத்த காதலையும் உணர்ந்து விடுகிறாள். எப்படியாவது அன்புவை பார்த்து விட வேண்டும் என துளசியிடம் உதவி கேட்கிறாள்.

இருதலை கொள்ளியாய் தவிக்கும் ஆனந்தி

லலிதா மற்றும் யாழினி கோயிலுக்கு வருவதை பார்த்து அவர்கள் திரும்புவதற்குள் அன்புவை பார்த்து விடுகிறேன் என துளசியிடம் கேட்கிறாள்.

துளசியும் அதற்கு சம்மதிக்க ஆனந்தி அன்புவை தேடி போகிறாள். அன்புவிடம் தன்னுடைய மொத்த காதலையும் கொட்டுகிறாள். ஆனந்தி அன்பு மீது இத்தனை பாசமாய் இருப்பதை பார்க்கும்போது துளசிக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு பக்கம் யார் காரணமே என்று தெரியாத கர்ப்பம், இன்னொரு பக்கம் உயிருக்கு உயிராய் காதலித்த அன்பு என இருதலை கொள்ளியாய் தவித்துக் கொண்டிருக்கிறாள் ஆனந்தி.

நேயர்களின் பெரும்பாலான கணிப்பு தலையில் அடிபட்டதால் அன்பு பழசை எல்லாம் மறந்து விடுவான் என்பது தான். இதனாலேயோ என்னவோ அன்பு கண் திறந்ததும் ஆனந்தியை பார்த்து யார் நீங்க என்று தான் கேட்கப் போகிறான்.

இது ஆனந்திக்கு பேரிடியாய் அமையும். இத்தனை நாள் இந்த சீரியலை பார்த்த ரசிகர்களின் கணிப்பு சரியாக இருக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.