சிங்கப்பெண்ணில் ஆனந்தியின் கர்ப்பத்தை வெளிக்கொண்டு வர போகும் அந்த 2 பேர்.. சிக்கி கொண்ட மித்ரா! – Cinemapettai

Tamil Cinema News

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. இவ்வளவு நாட்களாக தேடி வந்த அன்புவை உதாசீனப்படுத்திய ஆனந்தி இன்று ஒரு முறையாவது அன்புவை பார்த்துவிடமாட்டோமா என ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.

அதே நேரத்தில் ஆனந்தியின் சங்காத்தமே வேண்டாம் என அன்புவின் அம்மா தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டார். இந்த சூழ்நிலையில் தான் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை வெளியில் கொண்டு வர இரண்டு பேர் சேர்ந்த கூட்டணி உருவாகி இருக்கிறது.

சிக்கி கொண்ட மித்ரா!

மித்ரா தனக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால் யாரை வேண்டுமானாலும் கூட்டு சேர்த்துக் கொள்வாள். அதே நேரத்தில் தன்னுடைய தலை தப்ப வேண்டும் என்றால் அவர்களை கோர்த்து விட்டு விட்டு விலகி விடுவாள். அப்படி மித்ராவால் தற்போது கழட்டி விடப்பட்டவர்கள் தான் அரவிந்த் மற்றும் ரகு.

இவர்கள் இருவருக்கும் தான் கம்பெனி பார்ட்டியில் ஆனந்தியை மயக்கமடைய செய்தது, மித்ராவின் திட்டம் போன்றவை தெரியும். இந்த சூழ்நிலையில் தான் ஒரு பக்கம் மித்ராவின் அம்மா அரவிந்துக்கு மித்ராவை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

அதே மாதிரி மித்ராவுடன் கூட்டு சேர்ந்ததால் ரகு வெளியில் தலை காட்டாமல் சுத்தி வருகிறான். இவர்கள் இருவரும் தற்போது கூட்டு சேர்ந்து மித்ராவை பழி வாங்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.

மித்ராவை நோட்டமிடும் போது கண்டிப்பாக ஆனந்தியின் கர்ப்பம் பற்றி இவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கிறது. இதை வெளிக்கொண்டு வந்து தான் மித்ராவை மூக்கு உடைக்க போகிறார்கள். இந்த கூட்டணி வெற்றி பெறுகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.