கோபிக்கு மாமா வேலையை பார்க்கும் ஈஸ்வரி.. பாக்யா ராதிகாவிடம் மண்டியிடும் மாமியார் – Cinemapettai

Tamil Cinema News

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி பாக்கியா வேண்டாம் என்று ராதிகாவை கல்யாணம் பண்ணினார். ஆனால் அதன் பிறகும் ராதிகாவுடன் சந்தோஷமாக இல்லாமல் அல்லல்பட்டார். போதாதற்கு ராதிகாவுடன் கோபி சேர்ந்து வாழாதபடி ஈஸ்வரி டார்ச்சர் கொடுத்து வந்தார். ஈஸ்வரி கொடுத்த டார்ச்சரை தாங்க முடியாமல் ராதிகா, உங்க சங்கார்த்தமே வேண்டாம் என்று கோபியை விவாகரத்து பண்ணிட்டு தனியாக போய்விட்டார்.

அதன் பிறகு கோபியை பாக்யாவுடன் கோர்த்து விட வேண்டும் என்று ஈஸ்வரி பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்தார். அதற்கு எதற்கும் பாக்கியா சரிப்பட்டு வர மாட்டார் என்று தெரிந்ததும் பழையபடி ராதிகாவிடமே மண்டியிடும் அளவில் தனியாக சந்தித்து பேசுகிறார். அதாவது உனக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும், மயூக்கு ஒரு அப்பா வேண்டும். அதனால நீயும் கோபி மறுபடியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஈஸ்வரி, ராதிகாவிடம் பேசினார்.

இதனால் கடுப்பான ராதிகா, இப்பொழுதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன். அந்த நிம்மதியை மறுபடியும் நான் கெடுத்துக்க விரும்பவில்லை. நான் ரொம்ப பொறுமையாக உங்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மறுபடியும் இதைப் பற்றி பேசி என்னை டென்ஷன் படுத்த வேண்டாம் என்று சொல்லி போய் விடுகிறார். இந்த விஷயத்தை ராதிகா மூலம் கேள்விப்பட்ட கோபி வீட்டிற்கு வந்து ஈஸ்வரிடம் சண்டை போடுகிறார்.

இதனால் மன வருத்தத்தில் இருந்த ஈஸ்வரி, பாக்யாவிடம் நீயும் என் பிள்ளையும் சேர்ந்து வாழ்வதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டார். பாக்கியம் முடியாது என்று சொல்லிய நிலையில் கோபியின் தனிமையை நினைத்து பீல் பண்ணும் அளவிற்கு பாக்கியவுடன் பேசி மாமா வேலையை பார்க்க ஆரம்பித்தார். ஆனால் அது எதுவும் எடுபடாமல் போய்விடுகிறது.

இன்னொரு பக்கம் கோபி, பாக்கியாவை ரூட் விடும் விதமாக பாக்யாவை சுற்றி வருகிறார். பாக்கியாவின் ஹோட்டலுக்கு போய் பாட்டு பாடி பாக்கியா மனசுல இடம் பிடிக்கும் அளவிற்கு சில வேலைகளை பார்த்து வருகிறார். அந்த வகையில் மறுபடியும் இவர்கள் ஒன்று சேர்ந்து விடுவாங்க போல, அதற்கு ஏற்ற மாதிரி தான் கதையும் நகர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் குடிபோதையில் அடிமையான நிதிஷ் மறுபடியும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.

இதனால் நித்தேஷயின் நிலைமை இனியாவிற்கு தெரிந்து விடுமோ என்று சுதாகர் பயப்பட ஆரம்பித்து விட்டார். அதனால் நித்தேஷை இனியாவுடன் விடாமல் தன்னுடனே தூங்க வைத்து விடுகிறார். இதைப் பற்றி கேட்ட இனியாவிடம், நீ உன் முன்னால் காதலுடன் பேசி பழக்கப் போய் தான் என் பையன் இப்படி குடித்துவிட்டு நிம்மதி இல்லாமல் தவிக்கிறான் என்று நித்தீஷ் அம்மா, இனியவை திட்டி விடுகிறார். ஆக மொத்தத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் எல்லாருடைய கல்யாண வாழ்க்கையும் நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.