மீனா தலைமையில் அருண் சீதாவிற்கு நடந்த கல்யாணம்.. ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்த முத்து, ஆரம்பமான விரிசல் – Cinemapettai

Tamil Cinema News

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா பார்வதி இருவரும் சேர்ந்து சிந்தாமணியின் பிறந்தநாள் ஃபங்க்ஷனுக்கு போய்விட்டார்கள். அங்கே கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என கொண்டாடிய பிறகு சிந்தாமணியின் தோழி ஒருவர் வந்து விஜயா போட்டிருந்த செயினை பார்த்து இது என்னுடைய செயின் திருடு போய்விட்டது.

அது எப்படி உங்களிடம் வந்தது, திருடிட்டு போனது ஒரு பெண்தான். அப்படி என்றால் உங்கள் குடும்பம் திருட்டு குடும்பமா என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே விஜயா, என்னுடைய மருமகள் பணக்கார வீட்டு பொண்ணு மலேசியாவில் அவளுடைய குடும்பம் இருக்கிறது. அவள் தான் எனக்கு இந்த செயினை பரிசாக கொடுத்தார் என்று விஜயா சொல்கிறார்.

உடனே சிந்தாமணியின் தோழி, உங்க மருமகள் ஒரு திருடி அவர்தான் என்னிடம் இருந்து சென்னை திருடிட்டு போய் இருக்கணும். வாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார். உடனே சிந்தாமணி அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு உங்க செயின் கிடைத்து விட்டது. இந்த பிரச்சனையை இதோட முடித்து விடுங்கள் என்று சொல்லிய நிலையில் விஜயா அங்கே அவமானப்பட்டு பார்வதியை கூட்டிட்டு வீட்டுக்கு போய் விடுகிறார்.

வீட்டிற்கு வந்த விஜயா கோபத்துடன் இருந்த நிலையில் ரோகிணி மற்றும் மனோஜ் கொடைக்கானல் போவதற்காக விஜயாவை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு புடவையை வாங்கிட்டு வந்து கொடுக்கிறார்கள். ஏற்கனவே கோபத்தில் இருந்த விஜயா, ரோகினி கொண்டு வந்த புடவையை பார்த்ததும் இதையும் திருடிட்டு தான் வந்து என்னிடம் கொடுக்கிறாய் என்று கோபப்பட ஆரம்பித்து விட்டார்.

உடனே அந்த புடவையை வைத்து ரோகிணியை அடித்த நிலையில் அங்கிருந்த முத்து அண்ணாமலையை கூப்பிட்டு அப்பா வாங்க என கட்ட ஆரம்பித்து விட்டார். உடனே அண்ணாமலை வந்து என்ன என்று கேட்ட பொழுது விஜயா பிறந்தநாள் ஃபங்க்ஷனில் நடந்த விஷயத்தை சொல்லி ரோகிணி ஒரு திருடி என்று திட்ட ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு தான் ரோகிணிக்கு தெரிகிறது சிட்டி ஏமாத்தி கொடுத்து விட்டார் என்று.

இருந்தாலும் சிட்டி பேரை சொல்ல முடியாததால் தெரிஞ்சவரிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து தான் நான் வாங்கிட்டு வந்தேன். நான் திருட இல்லை என்று எல்லாரும் முன்னாடியும் சொல்கிறார். உடனே விஜயா அந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்தாலே நான் சமாதானமாய் இருப்பேனே என்று பேராசையில் சொல்ல ஆரம்பித்து விட்டார். இந்தப் பிரச்சினை முடிந்த நிலையில் அடுத்து வருவது என்னவென்றால் அருண் மற்றும் சீதாவை மீனா ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு கூட்டிட்டு போகிறார்.

அங்கே ஐயர் வந்த நிலையில் அருண் மற்றும் சீதாவுக்கு மாலையை கொடுத்து மாற்ற சொல்லி இருக்கிறார்கள். மாலையை மாத்தி திருமண கோலத்தில் நிற்கும் அளவிற்கு நின்று ரிஜிஸ்டர் ஆபீஸில் முறைப்படி கையெழுத்து போட்டு சட்டத் திருமணத்தை முடித்து விட்டார்கள். பிறகு அதே கையோடு மீனா அவர்களை ரிஜிஸ்டர் ஆபீஸ் ரூமில் இருந்து வெளியே கூட்டிட்டு வரும் பொழுது முருகனைக் கூட்டிட்டு முத்துவும் அங்கே வந்து விடுகிறார்.

வந்ததும் மீனாவை பார்த்து முத்து அதிர்ச்சியில் நிற்கிறார். பிறகு வெளியே வந்த அருண் மற்றும் சீதாவை பார்த்ததும் முத்து ரொம்பவே கோபப்பட ஆரம்பித்து விட்டார். அவர்களுக்கு கல்யாண நடந்ததை ஏற்றுக் கொள்ள முடியாத முத்து மீனாவிடம் திட்டி சண்டை போடும் அளவிற்கு ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். இதனால் மீனா மற்றும் முத்துவிற்கு இடையே விரிசல் ஆரம்பமாகப் போகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.