சிறகடிக்க ஆசை: கோபத்தில் கொந்தளித்த விஜயா.. எல்ல விஷயத்திலும் சந்தேகம் – Cinemapettai

Tamil Cinema News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்தன. இந்த பரபரப்பான திருப்பங்களை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்

அவமானப்பட்ட விஜயா!

விழாவில் விஜயா அணிந்திருக்கும் நகையை பார்த்துவிட்டு ஒரு பெண் இது என்னுடைய நகை என்று கூறுகிறார். சோதனை செய்யும்போது உண்மை தெரிய வருகிறது. விஜயா முகமே வாடி போகிறது.

இந்த நகை விவகாரம் பெரிதாகாமல் இருக்க சிந்தாமணி போலீஸ் வருவதை தடுத்து நிறுத்துவதற்காக நகையை கழட்டி கொடுக்குமாறு விஜயாவிடம் கேட்கிறார். விஜயாவும் விருப்பம் இல்லாமல் அந்த நகையை கழட்டி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.

வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

தான் அவமானப்பட்டதை எண்ணி வீட்டிற்குள் நுழையும் விஜயா ரோகினியை பார்த்து திருட்டு நகை வாங்கியது நீதான் இதற்கு காரணம் என்று பயங்கரமாக கண்டிக்கிறார். புடவை விவகாரத்திலும் தற்போது சந்தேகம் எனத் தொடங்கிய நிலையில் ஒட்டு மொத்த குடும்பமே அதிர்ச்சியில் இருக்கிறது.

பயங்கரமான கோபத்தில் இருக்கும் விஜயா ரோகிணியை பார்த்து கேட்ட கேள்வி: ” நீ வாங்கிய நகை ₹ 1 லட்சம் அதை எனக்கு திருப்பி கொடு” என்று ரோகினியிடம் விஜயா நஷ்ட ஈடு கேட்கிறார். இப்படி சீரியலை அதிர்ச்சியில் முடித்துள்ளனர்.

தொடர்ந்து வரும் குழப்பம் மற்றும் உண்மைகளின் வெளிச்சத்தில், விஜயாவின் மனதின் மாற்றம் சீரியலுக்கு மேலும் துடிப்பை சேர்க்கிறது.

அவமானம் மற்றும் நம்பிக்கையின் இடையில் சிக்கிக் கொண்டு இருக்கும் விஜயா, குடும்பத்தின் ஒற்றுமையை மீட்க முயற்சி செய்யும் பொழுது, ரோகினி மற்றும் மற்றவர்கள் உண்மையை வெளிச்சத்தில் கொண்டு வர புதிய முயற்சிகளை தொடங்குவர்.

இத்தகைய உறவுக் குழப்பங்கள் மற்றும் மன உளைச்சல்கள், “சிறகடிக்க ஆசை” தொடரை மேலும் பரபரப்பாகவும், திருப்பமிகுந்ததுமாக காட்சியளிக்க வைக்கும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.