தனுஷை வச்சுட்டே உண்மையை உடைத்த பேசிய சிரஞ்சீவி.. என்ன இப்படி சொல்லிட்டாரு! – Cinemapettai

Tamil Cinema News

Kubera : பல நாட்களாக படம் எப்போது ரிலீஸாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 20, குபேரா படம் வெளியாகி படத்தை பார்க்காமலேயே ரசிகர்களுக்கு உச்சாகத்தை கொடுத்தது.

இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனுஷ் முதன் முறையாக பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றது.

பரபரப்பை ஏற்படுத்திய பேச்சு..

இப்படத்தில் தீபக் என்ற கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா போலீசாக தனது நடிப்பை கச்சிதமாக திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார். இத்திரைப்படத்தில் என்னைச் சுற்றி முழுவதும் கதை அமைந்திருக்கும். நான்தான் ஹீரோவாக உணர்ந்தேன் என்று நாகார்ஜுனா பேசியது தனுஷ் ரசிகர்களை கோவத்துக்கு ஆளாக்கியது.

படம் நீண்ட நேரம் ஓடினால் பார்க்கும் மக்களுக்கு போர் அடித்து விடும் என்று படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கியது படக்குழு. இப்படம் முதலில் நல்ல சுவாரஸ்யமாக சென்றாலும் கடைசியில் கதையை “ஏன் இப்படி முடிக்கிறாங்க” என்று பல விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

உண்மையை உடைத்த நடிகர்..

ஹைதராபாத்தில் நடைபெற்ற குபேரா பட விழாவில் பேசிய நடிகர் சிரஞ்சீவி கூறியதாவது.

“நான் படத்தை பார்த்தேன் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவரும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கின்றனர். இவர்களின் நடிப்பை பார்த்து நானே வியந்து போனேன். எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கொடுத்திருந்தால் நிச்சயம் நடித்திருக்க மாட்டேன்” என்ற நடிகர் சிரஞ்சீவியின் இந்த பேச்சு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.