சிறகடிக்க ஆசை : மீனா-முத்துவுக்கு இடையே ஏற்படப்போகும் பிளவு.. சிட்டியை நெருங்கும் ரோகிணி – Cinemapettai

Tamil Cinema News

Siragadikka Aasai: மீனா எடுத்த முடிவு சரியா தப்பான்னு தெரியல. முத்துவுக்கு தெரியாம சீதாவுக்கும் அருணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அவங்களுக்கு அவங்க தங்கச்சியோட லைப் முக்கியம்னு தோணுது.

சீதாவும் அருணும் மாட்ட மாட்டாங்க. அவங்க முத்து வந்திருக்கிறத பார்த்து எங்கயாவது மறைஞ்சுப்பாங்க. நாமளும் அவங்க மாட்டிப்பாங்களோன்னு பதட்டத்தோட பார்த்துட்டே இருப்போம். மீனா முத்துவ பார்த்த உடனே ஷாக் ஆகுறாங்க எங்க மாட்டிக்க போறோமோன்னு பயப்படுறாங்க. ஆனாலும் பயத்தை வெளிய காட்டிக்காம முத்துவை பார்கறாங்க.

மீனா அங்க இருக்கறத பார்த்துட்டு நீ எங்க இங்கன்னு கேக்குறாரு. மீனாவும் நான் காலையில உங்ககிட்ட சொன்னேன்ல அந்த கல்யாணம் இங்க ரெஜிஸ்டர் ஆபீஸ்ல தான் நடக்குது. அவங்களுக்குதான் நான் மாலையை கொடுத்துட்டு
போக வந்தேன்னு சொல்லி சமாளிக்கிறாங்க.

சரி நீங்க எதுக்கு இங்க வந்தீங்கன்னு மீனா முத்துவை பார்த்து கேட்க நான் நம்ம முருகனுக்காகதான் வந்தேன். முருகனுக்கும் வித்யாவுக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்றத பத்தி விசாரிச்சுட்டு அதுக்கு என்னென்ன தேவைன்னு கேட்டுட்டு போகதான் நாங்க ரெண்டு பேரும் வந்தோம்னு மீனா கிட்ட சொல்லிட்டு சரி நீ வெயிட் பண்ணு நானும் வரேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே உங்க வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு முத்து உள்ள விசாரிக்க போறாரு.

அருணும் சீதாவும் அவருக்கு தெரியாம மறைஞ்சுக்கிறாங்க. இப்ப அலைப்பாயுதே பட ஸ்டைல்ல அருணும் சீதாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க ரெண்டு
பேரும் அவங்க அவங்க வீட்ல இருப்பாங்க சரியான சந்தர்ப்பம் வரும்போது இதை பத்தி வீட்ல சொல்லி உங்க கல்யாணத்தை நான் கிராண்டா பண்ணி வைக்கிறேன்னு மீனா வேற சொல்லி இருக்காங்க அதனால சீதாவும் அருணும் அதுவரைக்கும் வெயிட் பண்ணுவாங்க ஆனா முத்து எப்பவும் போல சீதாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பாரு அந்த மாப்பிள்ளையும் முடிவாகும்.

ஆனா அந்த கல்யாணம் நெருங்கும் போது சீதா அருண் கல்யாண விஷயம் தெரிய வரும். அந்த கல்யாணத்தை பண்ணி வச்சதே மீனாதான்னு தெரிய வரும்போது வீட்ல பெரிய பூகம்பமே வெடிக்கும். இதற்கிடையில் மீனாவின் அம்மா வீட்டில் சத்யா பாஸ் ஆனதுக்கு கிராண்ட் -ஆ சாப்பாடு விருந்தெல்லாம் நடக்குது.

இன்னொரு பக்கம் ரோகிணி சிட்டிய மீட் பண்ணி சண்டை போடுவாங்க. திருட்டு நகைய கொடுத்து என்ன ஏமாத்திட்டேல முதல்ல என் பணத்தை கொடுன்னு சண்டை
போடுவாங்க. அது திருட்டு நகையா எனக்கு எதுவுமே தெரியாதே.

ஒருத்தன் அவங்க குடும்பம் கஷ்டத்துல இருக்குன்னு இந்த நகையை வித்து தர சொல்லி கேட்டான். நானும் அந்த நகையை உன்கிட்ட வித்து அவனுக்கு பணத்தை கொடுத்துட்டேன். இது திருட்டு நகைன்னு எனக்கு தெரியாது.

உன்ன மாதிரிதான் நானும் அவன்கிட்ட ஏமாந்துட்டேன். என்கிட்ட பணம்ல்லாம் இல்லை. நான் வேணும்னா அவனை தேடி பார்க்கிறேன். அவன் கிடைச்சா உன் பணத்தை நான் வாங்கி தரேன்னு சிட்டி ரோகிணி கிட்ட போய் சொல்ல ரோகிணி என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாங்க.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.