சின்மயி விவகாரத்தில் மௌனம் ஏன்.? வைரமுத்துவின் பதில் இதுதான் – Cinemapettai

Tamil Cinema News

Vairamuthu-Chinmayi: பாடகி சின்மயி வைரமுத்து குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதில் சில வருடங்களுக்கு முன்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதை அடுத்து பலர் தங்களுக்கு நடந்த மீ டு பிரச்சனையை வெளிப்படையாக பேச தொடங்கினார்கள். ஆனால் இந்த விஷயத்தில் சின்மயி தேவையில்லாமல் பேசுவதாக கூறி தமிழில் அவர் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

சமீபத்தில் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பாடகி தீ வர முடியாத சூழலில் முத்த மழை பாடலை சின்மயி மேடையில் பாடினார். அதுதான் தற்போது அவர் மீண்டும் பேசப்படுவதற்கு காரணம்.

வைரமுத்துவின் பதில் இதுதான்

எதற்காக இத்தனை வருடம் அவரை ஒதுக்கி வைக்க வேண்டும். வைரமுத்துவுக்கு பெரிய இடத்தில் இருந்து சப்போர்ட் இருக்கிறது. அதனால் தான் திறமையான ஒரு பாடகி முடக்கப்பட்டு விட்டார் என அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் குவிந்தது.

இதில் கங்கை அமரன் கூட வைரமுத்து நல்ல கவிஞன். ஆனால் நல்ல மனிதன் கிடையாது என வெளிப்படையாக பேசி இருந்தார். இந்த விவாகரத்தில் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஒரு முக்கியமான விஷயத்தை கூறியுள்ளார்.

சமீபத்தில் வைரமுத்துவோடு பேசிக் கொண்டிருந்த பொழுது சின்மயி விவகாரத்தில் ஏன் தொடர் மவுனம் என இவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு கவிஞர் நான் அரசுக்கும் நீதித்துறைக்கும் மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என சொல்லி இருக்கிறார்.

அதனால் தான் இந்த விவகாரத்தில் அவர் மௌனம் காப்பதாக பிஸ்மி தெரிவித்துள்ளார். மேலும் தக் லைப் மூலம் சின்மயிக்கு ஒரு கவனம் கிடைத்துள்ளது. அதை பயன்படுத்தி மீண்டும் வைரமுத்துவை அவர் பழிவாங்க தொடங்கிவிட்டார்.

அதில் கங்கை அமரன் போன்றோர் இணைந்து கொண்டார்கள் என்றும் பிஸ்மி தெரிவித்துள்ளார். ஆனால் அவருடைய இந்த கருத்து ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.