திரும்புகிற இடமெல்லாம் கன்னிவெடியில் சிக்கும் ரோகினி.. முத்துவிடம் ஆசையை ஓப்பனாக சொன்ன சீதா – Cinemapettai

Tamil Cinema News

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து வைக்கணும் என்று முத்து நாளா பக்கமும் மாப்பிள்ளையை தேடி அலைகிறார். அப்படி பார்க்கும் பொழுது ஒன்று ஜாதகம் நன்றாக பொருந்துகிறது என்று அருண் ஜாதகமே அவருக்கு கிடைக்கிறது. இல்லை என்றால் பார்க்கும் மாப்பிளை விட்டார்கள் சீதாவின் காதல் விஷயம் தெரிந்ததும் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.

ஆனாலும் முத்து, யார் என்ன சொன்னாலும் அருணுக்கு நான் சீதாவை கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிடுகிறார். இதனை அடுத்து விஜயாவிடம் பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக முருகனிடம் ரோகிணி பணம் கேட்டார். இந்த விஷயம் வித்யாவிற்கு தெரிந்த நிலையில் ரோகிணிக்கு போன் பண்ணி வீட்டுக்கு வா என்று வித்யா கூப்பிடுகிறார்.

உடனே வித்தியா பணம் கொடுக்க தான் கூப்பிடுகிறார் என்ற நினைப்பில் ரோகினி, வித்யாவின் வீட்டிற்கு போகிறார். ஆனால் அங்கே எல்லாம் தலைகீழாக நடந்தது, அதாவது எனக்கு தெரியாமல் நீ என்ன உரிமையில் நான் கல்யாணம் பண்ணிக்க போகிற முருகனிடம் நீ பணம் கேட்பாய். உன்னுடைய சுயநலத்திற்காக நீ என்ன வேணாலும் பண்ணுவேன் என்று எனக்கே தெரியும். ஆனால் என்னுடைய வாழ்க்கையிலையும் தில்லாலங்கடி வேலையை பார்க்க துணிந்து விட்டாய்.

ஏற்கனவே இப்படித்தான் ஒரு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டிருந்தாய். அப்பொழுது வேறு வழி இல்லாமல் நான் முருகனிடம் வாங்கி கொடுத்தேன். மறுபடியும் பணம் வேண்டும் என்றதும் அவரிடம் கேட்கிறாய். அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதை கொஞ்சமாவது யோசித்து பார்த்தியா. நீ எல்லாரிடமும் பொய் சொல்லி ஏமாற்றுவது போல் என்னால் அப்படி இருக்க முடியாது என்று ரோகினியை வெளுத்து வாங்கும் அளவிற்கு ரோகினியின் உண்மையான முகத்தை வித்யா கிழித்து தொங்க விட்டார்.

இதனால் ரோகிணி வித்யாவின் நட்பு விரிசலாகிவிட்டது. வித்யாவிடம் அசிங்கப்பட்ட ரோகினி வீட்டில் போய் அழ ஆரம்பித்து விட்டார். பிறகு அங்கே வந்த மனோஜ் என்ன ஆச்சு என்று கேட்ட பொழுது இத்தனை பேரு இருந்தும் நான் ஒரு தனித்தீவில் இருப்பது போல் தான் இருக்கிறது. நான் யாரெல்லாம் நம்பினேனோ அவங்க எல்லாம் என்னை கைவிட்டு விட்டாங்க. எனக்காக நீயும் உங்க அம்மாவிடம் பேசவில்லை, வித்யாவிடமும் பணம் கேட்டதால் எங்களுக்குள் பிரச்சனை ஆகிவிட்டது.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு உங்க அம்மாவிடம் எனக்காக சப்போர்ட் பண்ணி பேசி இருந்தால் போதும். ஆனா நீ அதை எப்பொழுதும் செய்யவே மாட்டாய் என்று மனோஜிடம் சண்டை போடுகிறார். உடனே மனோஜ் உன் மீது எனக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால் என்றைக்குமே உன்னை நான் வெறுத்ததே இல்லை. அதே மாதிரி நீ பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பொழுது எல்லோரிடமும் எனக்கும் இந்த விஷயம் தெரியும் என்று உனக்கு சப்போர்ட்டாக நான் பொய் சொன்னேன்.

மறுபடி மறுபடியும் என்னால் உனக்காக பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நீ என்ன பண்ணினாலும் கடைசியில் ஏதாவது ஒரு பிரச்சனையில் வந்து தான் முடிகிறது என்று ரோகிணியின் காலை வாரிவிட்டார். இருந்தாலும் நான் உனக்கு ஐடியா கொடுக்கிறேன் நீ ரவி சுருதியிடம் பணம் கேட்டு பாரு என்று சொல்லிவிடுகிறார். உடனே ரோகிணி, ஸ்ருதியிடம் நிலைமையை எடுத்து சொல்லி பணத்தை கேட்கிறார்.

அதற்கு சுருதி இப்போதைக்கு என்னிடம் பணம் இல்லை என்று சொல்லிவிடுகிறார். உடனே மீனாவாக இருந்தால் நீங்கள் பணம் கொடுத்து உதவி பண்ணியிருப்பீங்க என்று கோபப்பட்டு ரோகிணி சுருதியிடம் சொல்கிறார். அதற்கு ஸ்ருதி நீங்களும் மீனாவும் ஒன்னு கிடையாது. உங்களை மாதிரி பொய் சொல்லி யாரையும் ஏமாற்றி இருக்க மாட்டாங்க. அத்தையை ஐஸ் வைக்க வேண்டும் என்று நகையும் வாங்கி கொடுத்திருக்க மாட்டாங்க.

அப்படியே ஏதாவது மீனாவுக்கு பிரச்சனை என்றால் அவங்க வீட்டுக்காரங்க அத்தையிடம் சண்டை போட்டு மீனாவுக்கு சப்போர்ட் ஆக நின்று இருப்பாங்க. அதே மாதிரி உங்க வீட்டுக்காரரையும் பேச சொல்லுங்க வேற வழி இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதனால் திரும்பிய இடம் எல்லாம் அவமானப்பட்டு ரோகிணி சிக்கிக் கொண்டார். அடுத்ததாக முத்து, சீதாவுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

அதை முத்து, மீனாவிடம் சொல்லிய பொழுது சீதா அருணை மனதில் வைத்து தான் உங்களிடம் சொல்லி இருக்கிறார் என்று சொல்கிறார். உடனே மீனாவை கூட்டிட்டு முத்து, சீதா வீட்டிற்கு போகிறார். போனதும் நீ என்னிடம் சொன்னது அருணை மனதில் வைத்து தானா என்று கேட்கிறார். சீதாவும் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஆமாம் என் மனசில் அருணை வைத்துக்கொண்டு தான் நான் உங்களிடம் சொன்னேன் என்று சீதாவின் ஆசையை ஓபன் ஆக முத்துவிடம் சொல்லிவிடுகிறார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத முத்து அதிர்ச்சியாகி கோபப்பட ஆரம்பித்து விட்டார். ஆனாலும் சூடு சொரணை இல்லாமல் முத்து மறுபடியும் சீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று முட்டாள்தனமான விஷயத்தில் தான் இறங்குவார். இதில் ஏற்கனவே சீதா அருணுக்கு, மீனா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைத்துவிட்டார் என்று தெரிந்தால் இன்னும் முத்து வானத்திற்கும் பூமிக்கும் குதித்து பிரச்சினை உண்டாக்குவார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.