வீரா சீரியலில் விஜிக்கு மரண பயத்தை காட்டிய மாறன்.. குடும்பத்தை பிரிக்கப் போகும் மருமகள் – Cinemapettai

Tamil Cinema News

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கண்மணி, ராகவனை கல்யாணம் பண்ணிட்டு வந்தார். ஆனால் கண்மணியின் திட்டம் தவறு, அதை நம் முறியடிக்க வேண்டும் என்று மாறன் கட்டின தாலியை ஏற்றுக்கொண்டு வீரா அக்காவுக்கு எதிராக ஒரே வீட்டிற்குள் வாங்கப்பட்டு வந்தார்.

வந்ததும் கண்மணி போடும் திட்டத்தை முறியடிக்கும் விதமாக வீரா, ராமச்சந்திரன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இப்படி இவர்கள் இரண்டு பேரும் சண்டை போடும் இந்த தருணத்தில் விஜி புதுசாக வந்து ஆட்டத்தை மாற்றி விட்டார். அதாவது பிருந்தா மற்றும் கார்த்திக் கல்யாணத்தின் போது பொய் நாடகம் போட்டு கார்த்திக் கையால் தாலி வாங்கிக் கொண்டார்.

விஜி சொன்னது பொய் என்று கார்த்திக் தெரிந்ததால் பிருந்தாவை கோவிலில் வைத்து யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணி வீட்டிற்கு கூட்டிட்டு வந்தார். அந்த வகையில் விஜி, ராமச்சந்திரன் குடும்பத்திற்குள் நுழைந்ததற்கு முக்கிய காரணம் ராமச்சந்திரனின் பசங்களின் சந்தோஷத்தை கெடுத்து துன்பப்படுத்த வேண்டும் என்றுதான்.

ஆனால் விஜியின் திட்டத்தை மாறன் மற்றும் வீரா புரிந்து கொண்டார்கள். அதனால் விஜி போடும் திட்டத்தை சுக்கு நூறாக உடைத்து குடும்பத்தில் இருப்பவர்களை காப்பாற்றி வருகிறார்கள். தற்போது விஜி பற்றிய ரகசியத்தை கண்டுபிடிக்கும் விதமாக கண்மணியும் விஜியுடன் கூட்டணி வைத்தது போல் ஒரு டிராமா போட்டு விட்டார். அதை நம்பி விஜி எல்லா பிளானையும் கண்மணியிடம் சொல்கிறார்.

கண்மணி அதை வீரா மற்றும் மாறனிடம் சொல்லி குடும்பத்தில் இருப்பவர்களை காப்பாற்றி வருகிறார்கள். தற்போது கோவிலில் பரிகாரம் நடக்கும் பொழுது வள்ளிக்கு பிரச்சினையை கொடுத்து வள்ளி கதையை முடிக்க வேண்டும் என்று விஜி ப்ளான் போட்டார். அது எதுவும் நடக்காத படி கண்மணி, வீரா, பிருந்தா, கார்த்திக், மாறன் மற்றும் ராகவன் என அனைவரும் சேர்ந்து வள்ளி அத்தையை காப்பாற்றி விட்டார்கள்.

அதுவும் மாறன், கருப்பன் சாமியாக உள்ள நுழைந்து விஜியை காப்பாற்றி ராமச்சந்திரன் குடும்பத்திற்கு நான் இருக்கும் வரை எந்த தீங்கும் நடக்காது என்று வாக்கு கொடுத்து விடுகிறார். அதன்படி சாமியாக இருக்கும் மாறனிடம் அனைவரும் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்கிறார்கள். அதே மாதிரி விஜியும் வாங்க போகும் பொழுது கருப்பன் விஜியை தள்ளிவிட்டு மரண பயத்தை காட்டி விடுகிறார்.

இதனால் கடுப்பான விஜி, முதலில் ஒற்றுமையாக இருக்கும் ராமச்சந்திரனின் குடும்பத்தில் இருப்பவர்களை தனித்தனியாக பிரிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் திட்டப்படி எல்லாம் நடக்கும் என்று பிளான் பண்ணிக் கொண்டார். அதனால் குடும்பத்தை பிரிக்க கார்த்திக்கின் மனைவியாக விஜி அடுத்த அஸ்திரத்தை கையில் எடுக்கப் போகிறார். ஆனால் என்ன நினைத்தாலும் மாறன் வீரா இருக்கும் வரை யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.