ராஜன் வகையறாவுக்கு வச்ச ஆப்பு.. பழைய பகைக்காக வெற்றிமாறனையே எதிர்க்கும் தனுஷ்! – Cinemapettai

Tamil Cinema News

Dhanush: தன்னுடைய பல வருட பகையை பழி தீர்ப்பதற்காக, நெருங்கிய நட்பிடமே விலை பேசி இருக்கிறார் தனுஷ் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. தனுஷின் நெருங்கிய நண்பர் வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்து ஒரு படம் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இது தான் வடசென்னை இரண்டாம் பாகம் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் வடசென்னையில் அமீர் என்று நடித்த முக்கிய கேரக்டர் ராஜனை வைத்து மட்டும் ஒரு முழு படம் எடுக்கப் போகிறார்கள். இந்த படத்திற்கு ராஜன் வகையறா என பெயரிடப்பட்டிருக்கிறது.

வெற்றிமாறனையே எதிர்க்கும் தனுஷ்!

இதில் தான் சிம்பு நடிப்பதாக சொல்லப்பட்டது. சமீபத்தில் இயக்குனர் ராம் கூட இதை உறுதி செய்திருந்தார். ராஜனை மயமாக வைத்து எடுப்பதால் கண்டிப்பாக வடசென்னை கதைக்களம் தான் இதில் இருக்கும். இந்த படம் வடசென்னை இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பை கூட குறைப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில்தான் ஒரு தயாரிப்பாளராக இந்த படத்தின் காப்புரிமையை கொடுக்க தனுஷ் 20-வது கோடி ரூபாய் பேரம் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷுக்கு தேசிய விருதுகள் வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் அவரை சிறந்த நடிகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த பெருமை வெற்றி மாறனுக்கு உண்டு.

ஆனால் சிம்புவுடன் இருக்கும் பழைய பகைக்காக வெற்றிமாறனிடமே NOC கொடுக்க 20 கோடி ரூபாய் தனுஷ் கேட்டிருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. வாழு வாழ விடு என்ற தன்னுடைய தாரக மந்திரத்தை தனுஷ் சொந்த வாழ்க்கையில் உபயோகப்படுத்தவில்லை என நயன்தாரா பேசியிருந்தார்.

அப்போது எல்லாம் நயன்தாராவுக்கு எதிராக திரும்பினார்கள். ஆனால் வெற்றிமாறனுக்கு தனுஷ் இப்படி ஒரு விஷயம் செய்திருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்கள் கொதித்து எழுந்து தனுஷுக்கு எதிராக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.