Kamalhasan : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இல்லாமல் தமிழ் சினிமா இருந்துவிடும் என்று கேட்கிற அளவுக்கு, தனக்கான ஒரு அடையாளத்தையும், தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ பெருமைகளையும் சேர்த்துள்ளார். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சிறு வயதிலிருந்தே தமிழ் சினிமாவில் படங்களை நடித்து வருகிறார்.
இவரின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருது பெற்றார். அதற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து சில படங்களுக்கான சிறந்த நடிகருக்கான விருதுகளை பெற்றுக்கொண்டே சென்றார், இன்னும் அதன் வழியில் பல விருதுகளை நோக்கி மேலும் பல சாதனை பயணத்தில்தான் இருக்கிறார் கமல்ஹாசன்.
இப்போது வெளிவரும் படங்கள் அனைத்துமே 50 நாட்கள் திரையில் ஓடினாலே பெரிதாக பேசப்படுகின்றன இப்போதைக்கு உள்ள சினிமா உலகத்தில். ஆனால் அன்றோ பல படங்கள் 100 நாட்கள் ஓடி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நிறைய படங்கள் “வெள்ளி விழா” படங்களாகவும் இருந்து வருகின்றன.
அந்த வகையில் வெள்ளி விழா நாயகன் என்ற பெயர் நம் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களையே சேரும். ஏனென்றால் ஒரே வருடத்தில் 5 வெள்ளி விழா படங்களை கொடுத்துள்ளார் நம் கமல்ஹாசன். தற்போது சில படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், ஆரம்பகால படங்களில் பல சாதனைகளை செய்துள்ளார் கமல்ஹாசன் அவர்கள்.
ஒரே வருடத்தில் 5 சில்வர் ஜுபிளீ படத்தை கொடுத்த கமல்ஹாசன்..
இவர் நடிப்பில் 1982-ல் வெளிவந்த “வாழ்வே மாயம்” என்ற படம் 200 நாட்கள் திரையரங்களில் ஓடியது. இது ஜனவரி 26 அன்று வெளியானது. இரண்டாவதாக பிப்ரவரி 19-ல் வெளிவந்த “மூன்றாம் பிறை” படம் 329 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மூன்றாவதாக மே 15-ல் வெளிவந்த “சனம் தேரி கஸம்” என்ற இந்தி படம் 175 நாட்கள் ஓடியது. நான்காவதாக ஆகஸ்ட் 14-ல் தமிழில் வெளிவந்த “சகலகலா வல்லவன்” 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா நிறைவு செய்தது. ஐந்தாவது அக்டோபர் 29-ல் வெளிவந்த “ஹே தோ கமல் ஹோகயா” என்ற இந்தி படம் 175 நாட்கள் ஓடியது.
மேற்கண்ட 5 படங்களும் ஒரே வருடத்தில் வெளியாகி வெள்ளி விழா படங்களாக திகழ்ந்தன. அதும் ஒரே வருடத்தில் 5 வெள்ளி விழா படங்களை கொடுத்த வெள்ளி விழா நாயகனை திரையுலகம் இந்து வரையில் கொண்டாடி வருகிறது. மேலும் ஒரே வருடத்தில் 5 வெள்ளி விழா படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமையை அடித்து கொள்ள இன்னும் எந்த நடிகரும் இந்த இடத்தை நெருங்கவில்லை என்பதே நம் சகலகலா வல்லவனின் பெருமை.