பச்சைக்கிளி முத்துசரத்துல GVM சொன்ன ஹீரோ சரத் இல்லயாம்.. இதனாலதான் பிளாப் ஆச்சு – Cinemapettai

Tamil Cinema News

GVM : தமிழ் சினிமாவில் “கௌதம் வாசுதேவ் மேனன்” இயக்கிய படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு. ஏனென்றால் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல பேர் போனவை என்றே கூறலாம். இவர் படத்தில் காதல், த்ரில்லர், ரொமான்ஸ் என அனைத்திற்கும் பஞ்சமில்லாமல் கதை நகர்ந்து செல்லும்.

மேலும் இவர் இயக்கிய மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய காதல் படங்கள் நம் கண்ணை விட்டு இன்னும் நீங்கவில்லை. அடுத்ததாக இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற திரில்லர் மற்றும் காதல் படங்களும் நம் கண்ணை விட்டு இன்னும் நீங்கவில்லை. இந்த படங்கள் மட்டுமல்லாமல் இவர் நிறைய படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இவர் அனைத்து கோணத்திலும் படம் எடுக்க தெரிந்த ஒரு இயக்குனர். கௌதம் வாசுதேவ் மேனன் படம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் வகையில் தான் அது அமையும். அவர் தேர்வு செய்யும் கதாநாயகர்களும், கதாநாயகிகளும் கூட படத்திற்கு மேலும் மெருகூட்டக்கூடியவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவர் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படம் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் சரத்குமார், ஆண்ட்ரியா, ஜோதிகா மற்றும் பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட் கொடுத்தவை. இந்த படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் ஜோதிகா நம்ப வைத்து ஏமாற்றும் பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சரத்குமாரும் ஆண்ட்ரியாவும் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள்.

GVM சொன்ன ஹீரோ சரத் இல்லயாம்..

சமீபத்திய பேட்டி ஒன்றில் “கௌதம் வாசுதேவ் மேனன்”, “பச்சைக்கிளி முத்துச்சரம்”படம் இயக்கப்பட்ட காலகட்டத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக நான் சேரனை முதலில் தேர்வு செய்து இருந்தேன். அப்போது சேரன் மூன்று மாதம் அவகாசம் கேட்டார் நடிப்பதற்காக. அந்த காலகட்டத்தில் நடிகை ஜோதிகா அவர்களுக்கும் மூன்று மாதத்தில் திருமணம் அதனால் திருமண வேலையில் ஜோதிகா ஈடுபடுவார் என தெரிந்து. நான் இந்த படத்திற்கு சரத்குமார் அவர்களை தேர்வு செய்து படத்தை முடித்து விட்டேன்.

அதாவது அதிக பணமும் போட்டு, அதிக நேரமும் எடுத்துக்கொண்டு ஒரு படத்தை தயாரிக்கிறார் என்று என்னை கூறினார்கள் அதனால் இந்த படத்தை அவசரமாக எடுத்து முடிக்க திட்டமிட்டது தான் நான் செய்த தவறு என்று சமீபத்திய பேட்டி ஒன்று கூறியுள்ளார் “கௌதம் வாசுதேவ் மேனன்”. இதனால்தான் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் தோல்வியை சந்தித்தது என்றும் கூறியுள்ளார்.

அவ்வாறாக சேரன் அவர்களை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை இயக்கி இருந்தால் இந்த படம் வெற்றி பெற்றிருக்குமா என தெரியவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்கத்தில் வெளிவரவிற்கும் அடுத்த படத்திற்காக அனைவரும் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர் இயக்கத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் தன்னை மெருகேற்றி அனைவரையும் கவரும் விதத்தில் நடித்து வருகிறார் என்பதும் வியக்கத்தக்கது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.