சீரியல் ஹீரோவை நம்பி ஏமாந்த சேச்சி.. இப்ப கண்ணீர் விட்டு என்ன பிரயோஜனம் – Cinemapettai

Tamil Cinema News

Gossip: அந்த சீரியல் ஹீரோ பெண்கள் விஷயத்தில் ரொம்பமோசமானவர். ஆனால் வெளியில் பார்த்தால் உத்தமன் மாதிரி நடந்து கொள்வார். இதெல்லாம் ஒரு காலம் வரை தான்.

இப்போது அவருடைய உண்மையான குணம் எல்லோருக்கும் தெரியவந்து வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். முக்கிய சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த இவர் ஜோடியாக நடித்த நடிகையுடன் நெருக்கமான நட்பை வளர்த்தார்.

இத்தனைக்கும் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் தன்னுடைய கல்யாணத்தை ரகசியமாகவே அவர் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் சீரியல் நடிகை உடன் நட்பு ஓவராக போய் தனியாக இருவரும் வீடு எடுத்து தங்கும் அளவிற்கு வந்திருக்கிறது.

சீரியல் ஹீரோவை நம்பி ஏமாந்த சேச்சி

அப்போதுதான் நடிகரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிய வந்து ஒரே பிரச்சினையாக மாறியது. ஆனால் நடிகர் சீரியல் நடிகையின் பக்கம் தான் இருந்தார். ஆனால் இப்போது பார்த்தால் இருவரும் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்து விட்டார்கள்.

ஏனென்றால் நடிகர் முன்பு போல் இல்லாமல் நடிகையை அவாய்ட் செய்ய ஆரம்பித்தாராம். எவ்வளவு பேசி பார்த்தும் கூட அவருடைய நடவடிக்கையில் மாற்றம் இல்லை. உடனே நடிகையின் நெருங்கிய தோழி அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

தற்போது காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்திருக்கும் நடிகை தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறாராம். ஆனாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்ததற்கு இதெல்லாம் இவருக்கு தேவை தான் என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.