சுட சுட மணக்கும் தேங்காய் சாதம் வித்யாசமான சுவையுடன் நீங்களும் செஞ்சு பார்க்க மறக்காதிங்க!

Samayal Kurippugal

coconut rice1

காலை நேரம் எழுந்ததுமே நம்ம வீட்டில் சில நாட்கள் “இன்னிக்கு என்ன டிபன் பாக்ஸ் ரெசிபி தயார் செய்யலாம்?” என்ற கேள்வி வந்தாலே மனசு தேங்காய் வாசனைக்கே போய்விடும். சுலபமாகவும், மணமும், சுவையும் நிறைந்த தேங்காய் சாதம் தான் அதற்கு சிறந்த பதில்! ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது சாதாரண தேங்காய் சாதமல்ல! கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் கூடிய அற்புதமான வீடே மணக்கும் தேங்காய் சாதம் ரெசிபி எப்படி செய்யலாம்? என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காணலாம் வாருங்கள்.

தேங்காய் சாதம் ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்:
சோறு – 2 கப் (வெந்த, குளிர்ந்தது நல்லது)
துருவிய தேங்காய் – 1 கப்
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
உலர் மிளகாய் – 2
இஞ்சி – 1 inch (சிறிது துருவியது)
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சில
நெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சிறிது வறுத்த முந்திரிப்பருப்பு அல்லது வேர்கடலை – அலங்கரிக்க

தேங்காய் சாதம் ரெசிபி செய்வது எப்படி:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். பின் அந்த கடாயில் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவிற்கு சேர்த்து சூடாக்கவும். கடுகு, போட்டு தாளித்தம் செய்து உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பச்சை மிளகாய், உலர் மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்து நறுமணம் வரும் வரை வதக்கவும்.

இப்போது துருவிய தேங்காயை சேர்த்து இரண்டு நிமிடம் மட்டும் வறுக்கவும், அதன் நிறம் மாறக்கூடாது. வெள்ளை வெளேர் என இருந்தால் தான் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். தேவையான அளவிற்கு இப்போது உப்பு சேர்க்கவும். இறுதியில் தயார் செய்து வைத்துள்ள உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து மெதுவாக கலக்கவும். கடைசியாக வறுத்த முந்திரி அல்லது வேர்கடலை சேர்த்து அலங்கரிக்கவும்.

சாதம் கலக்கும் போது சிறிது எலுமிச்சை சாறு அல்லது மிளகாய்த் தூள் ஒரு சிட்டிகை சேர்த்தால் சுவை ஒரு ஸ்டேஜ் மேலே போய்விடும்! காலை லஞ்ச் பாக்ஸ்க்கு இது சூப்பராக இருக்கும். தேங்காய் வாசனையும், பருப்பின் மொறு மொறு சுவையும் சேர்ந்து நாக்கில் நச்சென கலக்குது! தேங்காய் சாதம் சூடாக இருக்கும் போது பக்கத்துக்கு மோர், அல்லது உருளைக்கிழங்கு வறுவல், அல்லது எளிய அவியல் இவற்றில் ஏதாவது சேர்த்தால் மொத்தமா ஒரு பண்டிகை உணர்ச்சி வரும்!

இதையும் படிக்கலாமே:
பஞ்ச தத்வ கிருஷ்ண மந்திரம்

நம்மூர் தேங்காய் தான் நம்ம சுவையின் ராஜா. ஒவ்வொரு கரண்டியிலும் வீட்டின் இனிமையும், நெய்யின் மணமும் கலந்த அன்பு இருக்கிறது. இன்று இந்த வித்தியாசமான தேங்காய் சாதம் செய்து பாருங்கள், உங்க வீட்டில் எல்லாரும் “இது வேற மாதிரி சுவை!”ன்னு கண்டிப்பா பாராட்டி சொல்வாங்க!

The post சுவையான தேங்காய் சாதம் appeared first on Dheivegam.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.