நண்பர்கள் இந்த தலைப்பின் கீழ் அவனர்களின் கற்பனை சிறகு விரித்து கவிதையாய் எழுதி மகிழ நாங்கள் வழங்கும்
தலைப்பு ஸ்டார்ட்( ஆரம்பம்)
எந்த ஒரு செயலுக்கும் ஆரம்பம் உண்டு அது போல நம் கற்பனை கவி பனி இங்கு சிறப்பதை காணலாம்
Let's begin our beautiful journy with the beautiful "START"
நாளின் தொடக்கம் நம் நினைவுகளின் தொடக்கம் அத்தனைக்கும் தொடக்க புள்ளி உண்டு!!!
அதுவே ஆரம்ப புள்ளி நம் அனைவருக்கும் ஆரம்பம் என்ற ஒன்று உண்டு அது வழிநடத்த நாம் மேற்கொள்ளும் பயணமே நம் வாழ்க்கை பயணம்!!!!
எண்ணமும் செயலும் ஆரம்பம் இன்றி முடிவை எட்டுவதில்லை!!!
ஒரு நல்ல என்னம் நல்ல செயலை உருவாக்கும் அதன் பயணம் நல்லதை நோக்கி ஒரு நல்ல முடிவை தரும்!!!
அந்த முடிவும் ஒரு ஆரம்பமே நம் அடுத்த பணத்திற்கு🌹🌹🌹
ஒவ்வொரு தொடக்கம்
ஒவ்வொரு தொடக்கமும் சுலபமில்லை,
உயர்ந்த சுவர்கள் முன் நிற்கும்.
ஆனால் ஒரு ஒரு படியாக சென்றால்,
அசாத்தியம் கூட அடங்கும் நாள்தோறும்.
ஒவ்வொரு தொடக்கமும் சவால்கள் தரும்,
அவை உன் உள்ளத்தில் வீரனை உருவாக்கும்.
போராடும் போதே பலம் பெருகும்,
உள்ளங்கையில் நம்பிக்கை மலரும்.
ஒவ்வொரு விடியலும் சொல்வது இதையே:
"மீண்டும் எழு, மீண்டும் நட" என்பதே.
மாலையின் சூரியன் மறைந்தாலும்,
காலை ஒளி மீண்டும் பிறக்கும்.
முடிவின் பின்னும் தொடக்கம் காத்திருக்கிறது,
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது.
உன் மூச்சு இருக்கும் வரை பயமின்றி நட,
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!!!!
Quote from: Mytri on Dec 17, 2025, 04:57 PMநாளின் தொடக்கம் நம் நினைவுகளின் தொடக்கம் அத்தனைக்கும் தொடக்க புள்ளி உண்டு!!!
அதுவே ஆரம்ப புள்ளி நம் அனைவருக்கும் ஆரம்பம் என்ற ஒன்று உண்டு அது வழிநடத்த நாம் மேற்கொள்ளும் பயணமே நம் வாழ்க்கை பயணம்!!!!
எண்ணமும் செயலும் ஆரம்பம் இன்றி முடிவை எட்டுவதில்லை!!!
ஒரு நல்ல என்னம் நல்ல செயலை உருவாக்கும் அதன் பயணம் நல்லதை நோக்கி ஒரு நல்ல முடிவை தரும்!!!
அந்த முடிவும் ஒரு ஆரம்பமே நம் அடுத்த பணத்திற்கு🌹🌹🌹
(nice dr ithe mathri enoda ariva use pani eluthren athuku start ah irukatum 🦥🦥🦥🤭🤭)
Quote from: Cleopatra on Dec 17, 2025, 07:07 PMஒவ்வொரு தொடக்கம்
ஒவ்வொரு தொடக்கமும் சுலபமில்லை,
உயர்ந்த சுவர்கள் முன் நிற்கும்.
ஆனால் ஒரு ஒரு படியாக சென்றால்,
அசாத்தியம் கூட அடங்கும் நாள்தோறும்.
ஒவ்வொரு தொடக்கமும் சவால்கள் தரும்,
அவை உன் உள்ளத்தில் வீரனை உருவாக்கும்.
போராடும் போதே பலம் பெருகும்,
உள்ளங்கையில் நம்பிக்கை மலரும்.
ஒவ்வொரு விடியலும் சொல்வது இதையே:
"மீண்டும் எழு, மீண்டும் நட" என்பதே.
மாலையின் சூரியன் மறைந்தாலும்,
காலை ஒளி மீண்டும் பிறக்கும்.
முடிவின் பின்னும் தொடக்கம் காத்திருக்கிறது,
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது.
உன் மூச்சு இருக்கும் வரை பயமின்றி நட,
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!!!!
nice sis 💕
Arumai Arumai
Quote from: Cleopatra on Dec 17, 2025, 07:07 PMஒவ்வொரு தொடக்கம்
ஒவ்வொரு தொடக்கமும் சுலபமில்லை,
உயர்ந்த சுவர்கள் முன் நிற்கும்.
ஆனால் ஒரு ஒரு படியாக சென்றால்,
அசாத்தியம் கூட அடங்கும் நாள்தோறும்.
ஒவ்வொரு தொடக்கமும் சவால்கள் தரும்,
அவை உன் உள்ளத்தில் வீரனை உருவாக்கும்.
போராடும் போதே பலம் பெருகும்,
உள்ளங்கையில் நம்பிக்கை மலரும்.
ஒவ்வொரு விடியலும் சொல்வது இதையே:
"மீண்டும் எழு, மீண்டும் நட" என்பதே.
மாலையின் சூரியன் மறைந்தாலும்,
காலை ஒளி மீண்டும் பிறக்கும்.
முடிவின் பின்னும் தொடக்கம் காத்திருக்கிறது,
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது.
உன் மூச்சு இருக்கும் வரை பயமின்றி நட,
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!!!!
aagachirandha arumaiyana padaipu ungalin indha varigal
முடிவில்லா கதைகள் உண்டு
ஆரம்பமில்லா கவிதையேது ?
முடிவில்லா நேரம் உண்டு
ஆரம்பமில்லாத அன்பேது ?
முடிவில்லா உறக்கம் உண்டு
ஆரம்பமில்லாத உயிரேது ?
நிஜமில்லா நிழல் உண்டு
ஆரம்பமில்லா கனவேது ?
ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காலம் உண்டு.
ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு வேலை உண்டு.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரம் உண்டு.
இவை அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு.
அற்பமான ஆரம்பத்தை விருப்பமாக ஏற்றால்,
சிற்பமான சிரிப்பும் சிறகாகவேஅமையும்.
ஆரம்பத்தின் எழுச்சி, முடிந்தவரை முயற்சி
காலத்தின் தொடர்ச்சி, இறுதியில் மகிழ்ச்சி
Quote from: Poochandii on Dec 17, 2025, 10:51 PMமுடிவில்லா கதைகள் உண்டு
ஆரம்பமில்லா கவிதையேது ?
முடிவில்லா நேரம் உண்டு
ஆரம்பமில்லாத அன்பேது ?
முடிவில்லா உறக்கம் உண்டு
ஆரம்பமில்லாத உயிரேது ?
நிஜமில்லா நிழல் உண்டு
ஆரம்பமில்லா கனவேது ?
ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காலம் உண்டு.
ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு வேலை உண்டு.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரம் உண்டு.
இவை அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு.
அற்பமான ஆரம்பத்தை விருப்பமாக ஏற்றால்,
சிற்பமான சிரிப்பும் சிறகாகவேஅமையும்.
ஆரம்பத்தின் எழுச்சி, முடிந்தவரை முயற்சி
காலத்தின் தொடர்ச்சி, இறுதியில் மகிழ்ச்சி
excellent lines enna poochi kalakitiye
தொடக்கம்
ஒரு தொடக்கம்...
அது
எப்போதும் வெற்றியின் வாசலாக இருப்பதில்லை!
சில சமயம்,
அது தோல்வி என்னும்
இருட்டறையின்
முதல் படிக்கட்டாக இருக்கும்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்!
நின்றுவிட்ட வாழ்க்கை
எப்போதும் சிதைந்த சரித்திரமே...
நகரத் துணிந்த வாழ்க்கைதான்
வரலாற்றின் முதல் வரி! ✨
முதல் அடியை எடுக்கும் போது
பயம் —
கால்களைப் பிணைக்கிறது 😔
நம்பிக்கை —
கைகளைப் பிடித்து இழுக்கிறது 🤍
சந்தேகம் —
பின்னால் நின்றபடி
மெல்லக் கேட்கிறது...
" உன்னால் முடியுமா?"
அந்தக் கேள்வியை
செவியால் அல்ல...
இதயத்தால் மிதித்து
ஒரு மனிதன் முன்னேறினால்,
அங்கேயே தொடங்குகிறது
உண்மையான வாழ்க்கை! 🔥
தொடக்கம்
எப்போதும்
புன்னகை பூசி வருவதில்லை!
வலி,
வியர்வு,
கண்ணீர் —
இந்த மூன்றையும்
தன் உடையில் தைத்துக் கொண்டே
அது பெரும்பாலும் வருகிறது 💧
சில தொடக்கங்கள்
காதலாய் மலர்கின்றன 🌹
சில தொடக்கங்கள்
பிரிவாய் மாறி
நெஞ்சைச் சிதைக்கின்றன 💔
ஒரு கணச் சிரிப்பில்
உலகமே கிடைத்ததுபோல் தோன்றும்,
அதே கண்கள்
ஒரு கணத்தில்
உலகமே இழந்ததுபோல்
நீரில் கரையும்...
இதுவும் ஒரு தொடக்கமே!
அம்மாவின் கரம் விட்டு
விடுபட்டு,
முதன்முறையாக
பள்ளி வாசல் தாண்டும் அந்த நொடி —
அது பயத்துடன் கலந்த
கனவுகளின் தொடக்கம் 🎒
அப்பாவின் கனவுகளைச் சுமந்து,
தன் ஆசைகளை மௌனமாகப் புதைத்து,
வாழ்க்கை என்னும் போருக்கு
காலை எடுத்துவைக்கும்
மகனின் முதல் நாள் —
அது பொறுப்பின் தொடக்கம் 👣
காதலைச் சொல்லத் துணிந்து,
"இல்லை" என்ற
ஒரே ஒரு சொல்லில்
உடைந்து சிதறிய
மனதிற்கும்...
அதுவே ஒரு தொடக்கம்!
ஏனெனில்...
வீழாதவன் மனிதனல்ல!
வீழ்ந்து எழாதவனே
முடிவானவன்!
மண்ணில் விழுந்த பிறகும்
மண்ணிலிருந்து எழுந்து
தன்னை மீண்டும் நம்பும்
அந்த ஒரே தருணம் —
அதுவே
எல்லாத் தொடக்கங்களிலும்
மிகப் பெரும் தொடக்கம்! 🔥🔥
தோல்வி
ஒருபோதும் முடிவல்ல!
அது
புதிய பாதையைச் சுட்டும்
மௌனச் சுடரே! 🕯�
வலிகள்
நம்மை உடைக்க வருவதில்லை!
நம்மை
ஒரு சிற்பமாகச் செதுக்கவே
வருகின்றன 🪨
நம்பிக்கை சோர்ந்த
இருட்டான இரவுகளுக்குப் பிறகே
விடியல் பிறக்கிறது 🌅
அழுத கண்களுக்குப் பிறகே
தெளிவான பார்வை மலர்கிறது!
தொடக்கம் என்பது
ஒரு நாளின் பெயரல்ல!
அது
ஒரு மனிதன்
மீண்டும் பிறக்கும் தருணம் 🌼
நீ விழுந்தாயா?
பரவாயில்லை!
நீ எழுந்து நின்றாயா?
அதுவே தொடக்கம்! 💪
உன் பயம்
இன்னும் உன்னோடு இருக்கிறதா?
அதைத் தோளில் சுமந்தபடியே
முன்னேறு!
அதுவே துணிச்சலின் தொடக்கம்! 🦁
ஒரு நாள்...
உன் வாழ்க்கை
உன் கைகளில்
நிம்மதியாக அடங்கும் போது 🤲
நீ திரும்பிப் பார்ப்பாய்...
அப்போது புரியும் —
அந்த முதல் அடிதான்
இந்த முழுப் பயணத்திற்கும்
விதையாய் இருந்தது 🌱
ஏனெனில்...
தொடக்கம் தான்
ஒரு மனிதனை
தன்னைத்தானே கண்டடையச் செய்யும்
முதல் அத்தியாயம்! 📖✨
Epic கிறுக்கல் ✍️
Arumai Arumai 👏👏👏
Quote from: Mytri on Dec 17, 2025, 04:57 PMநாளின் தொடக்கம் நம் நினைவுகளின் தொடக்கம் அத்தனைக்கும் தொடக்க புள்ளி உண்டு!!!
அதுவே ஆரம்ப புள்ளி நம் அனைவருக்கும் ஆரம்பம் என்ற ஒன்று உண்டு அது வழிநடத்த நாம் மேற்கொள்ளும் பயணமே நம் வாழ்க்கை பயணம்!!!!
எண்ணமும் செயலும் ஆரம்பம் இன்றி முடிவை எட்டுவதில்லை!!!
ஒரு நல்ல என்னம் நல்ல செயலை உருவாக்கும் அதன் பயணம் நல்லதை நோக்கி ஒரு நல்ல முடிவை தரும்!!!
அந்த முடிவும் ஒரு ஆரம்பமே நம் அடுத்த பணத்திற்கு🌹🌹🌹
Mass mass
ஒவ்வொரு நொடியும் உனக்காய் காத்திருந்த என் விழிகள் இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக காத்திருக்கிறது, கண்ணீரோடு