வரும் 2026 புது வருடத்தை வரவேற்க நாமும் நமது கற்பனையை சிதற விட நமது குழு கீழ் காணும் தலைப்பை நமக்கு வாய்ப்பாக அமைத்து கொடுத்து உள்ளது🌹🌹🌹
ஒன்றாக பயணிப்போம்🌠🌠🌠
(https://i.postimg.cc/bvWVd3Ht/person-standing-asphalt-road-white-line-words-step-painted-front-them-symbolizing-new-year-405407687.jpg) (https://postimg.cc/Lqk3bkW9)
மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்,
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும்.
இது பாரதியின் வாக்கு.
தோல்வியைக் கண்டு பயப்படுபவர்கள் மூடர்களுக்கு சமம் வெற்றியைக் கண்டு ஆணவத்தில் ஆடுபவர்கள் என்றும் வாழ்வில் நிரந்தரமாக மகிழ்ச்சியோ வெற்றியோ அடைய முடியாது அதுபோல நீங்களும் உங்கள் வாழ்வில் தோல்வியை கண்டு பயம் கொள்ளாதீர்கள் வெற்றியைக் கண்டு தலைக்கனம் கொள்ளாதீர்கள் வெற்றி தோல்வி மனிதனுக்கு என்றுமே நிரந்தரமல்ல கடந்த வருடத்தில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு வருகின்ற வருடத்தில் அதை எவ்வாறு நாம் நமக்கான வெற்றியை பாதையாக மாற்றிக் கொள்ளலாம் என்று சிந்தியுங்கள்
பாரதியின் வாக்கை போல உங்கள் வாழ்வில் நீங்களும் அதன் பொருள் செயல்பட்டு மென்மேலும் உங்கள் வாழ்வில் வளர்ச்சி அடைய இந்த DEAR DEVIL லின் வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Nandri nanba nice lines
அடியெடுத்து வைத்த காலமிது அரும்புதிர்,
அறிவெழும் நாளமிது அழகியதிர்.
அழிந்தவை அழியட்டும் அலைகள் போல,
அழியா நம்பிக்கை எழுக மனதோல.
இருள் சூழ்ந்த இரவுகள் இன்றோ விடிக,
இதயத்தின் உள்ளம் இனிதே துடிக்க.
இழிவென்று எண்ணிய இடர்கள் யாவும்,
இலக்கினை காட்டும் விளக்கே ஆகும்.
முன்னேறும் மனிதனுக்கு முடிவில்லை,
முயற்சியைக் கடந்த மந்திரமில்லை.
முயன்றவன் வாழ்வு முற்றும் மாறும்,
முடங்கிய மனம் மட்டும் துன்பம் சேரும்.
காலம் கசக்கும் கண்ணீர் தரினும்,
கனிந்த கனவுகள் கைவிடாதினும்,
கடமை தவறா கரங்கள் உயர,
கடவுளும் வழிகாட்டி அருகே வர.
நம்பிக்கை நெஞ்சில் நெருப்பாய் எரிய,
நாளைய உலகம் நம்மோடு வரிய.
நிழலென வந்த நெருக்கடி யாவும்,
நிச்சய வெற்றியின் வாசல் ஆகும்.
பாதை பிழைத்தாலும் பயணம் தொடர,
பயணம் நின்றாலும் பாசம் வளர.
பயத்தை கடந்தவன் பார்வை தெளிவு,
பார்வை விரிந்தவன் பாதை பெரிது.
வீழ்வதனால் வாழ்வு தோற்காதே,
விழித்தெழுந்தால் விதி விலகாதே.
வலியும் வாதையும் வாழ்க்கை நூல்,
வாழ்ந்து கற்கும் மானிட பள்ளி அது மூல்.
அறிவு அகந்தை ஆகாதே,
அன்பு பலவீனம் எனாதே.
அருள் நிறைந்த உள்ளம் கொண்டவன்,
அகிலம் வணங்கும் மானுடவன்.
தோல்வி தடை அல்ல – தரம் காட்டும்,
துயரம் தண்டனை அல்ல – தெளிவு ஊட்டும்.
துணிந்தவன் பாதை துண்டிப்பதில்லை,
துவண்டவன் கனவு துளிர்ப்பதில்லை.
உழைப்பின் வியர்வை உயர்வின் விதை,
உறுதியின் பயிர் அறுவடை சதை.
உறக்கம் களைந்து உழைக்கும் நெஞ்சம்,
உச்சி தொடும் ஒருநாள் நிச்சயம்.
பிறப்பின் பொருள் புரிந்தவன் மனிதன்,
பிறரின் வலி உணர்ந்தவன் மகத்துவன்.
பெற்றதை மட்டும் பேணும் உலகில்,
பகிர்ந்தவன் வாழ்வே பெரும் புகழில்.
இன்றெனும் விதை நாளைய மரம்,
இச்சை அல்ல – இலக்கு தரும் தரம்.
இலக்கு தெளிந்தால் இடர்கள் விலகும்,
இதயம் துணிந்தால் உலகம் வணங்கும்.
காலம் கொடுக்கும் கடைசி மூச்சிலும்,
கனவுகள் உயிராய் கரங்கள் பூட்டிலும்,
மனிதன் மனிதனாய் வாழ்ந்திட வேண்டும்,
மகிழ்ச்சியின் அர்த்தம் உணர்ந்திட வேண்டும்.
அன்பு வளர்க்கும் இல்லமே கோயில்,
அறம் காக்கும் உள்ளமே அரசியல்.
பொய் பேசா நாவே புனிதம்,
பிறர் வலியை உணரும் மனமே கவிதம்.
சாதி மதம் என சுவர்கள் உடைத்து,
சமத்துவ விதைகள் உலகில் விதைத்து,
மனிதம் மட்டுமே மதமாய் கொண்டு,
மகத்துவ வாழ்வு மலரட்டும் இன்று.
இது தான் காலம் சொல்லும் சத்தியம்,
இது தான் வாழ்வு தரும் நித்தியம்.
அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு நாளும்,
அர்த்தமாய் மாறட்டும் உன் வாழ்வு
Epic கிறுக்கல் ✍️
உன் விழியோடு எனது மனம் பேசினது, ஒரு பார்வையில் என் உயிர் நிலைத்தது. ஓரமாய் நின்றாய் நீ, என் உலகமாய் மாறினாய்.
கண்ணின் வழி வந்த காதல், மொழியில்லாமல் செதுக்கிய கவிதை. நாள் முழுதும் நினைவோடு, என் கண்கள் உன்னையே தேடுகின்றன.
மௌனத்தில் கூட நாம் பேசிக்கொள்கிறோம், அமைதியே நம் காதலின் மொழி. ஒரு பார்வை போதும் புரிந்துகொள்வதற்கு, மனங்கள் ஒன்றாக இசைகிறது.
ஒரு வார்த்தை கூட இல்லாமல் பிரிந்தேனே, என் இதயம் இன்னும் உன் வழியை தேடுகிறது. நினைவுகள் மட்டும் தான் மீதமிருக்கின்றன, அவை ஒவ்வொன்றும் ஒரு கண்ணீரில் சுருங்குகின்றன.
ஒவ்வொரு நொடியும் உனக்காய் காத்திருந்த என் விழிகள் இன்று பல மணிநேரமாய் உறக்கத்திற்காக காத்திருக்கிறது, கண்ணீரோடு
கோபங்களும் கட்டுப்பாடுகளும் என் அன்பின் வெளிப்பாடுகளே.. இதை நீ புரிந்துகொள்வாய் என்று நினைத்தேன்.. ஆனால் நீயோ பிரிந்து சென்றாய்.