தானே தானே தந்தாநேன்னே தானே நானே தந்தாநேன்னே
தானே தானே தந்தாநேன்னே தானே நானே தந்தாநேன்னே
தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்கொரு குணம் உண்டு யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னவன் தமிழனடா
தமிழனோட கில்லி விளையாட்டு கிரிக்கெட் டாக மாறிடுச்சு
எங்களோட சடுகுடு ஆட்டம் கபடியாக மாறிடுச்சு
காக்கயும் குருவியும் எங்க ஜாதி
கடலும் மலையும் எங்க கூட்டம்
வந்தாரை வாழவைக்கும் செந்தமிழர் நாடு தாங்க
ஏறு கட்டவும் பாட்டு உண்டு
ஏத்தம் இறைக்கவும் பாட்டு உண்டு
நாத்து நடவும் பாட்டு உண்டு பாட்டில் நல்ல பொருளும் உண்டு (தானே )