கேழ்வரகு காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ சாப்பிட ஏற்ற ஒரு சத்தான உணவாகும். கேழ்வரகு (ராகி) ஒரு சத்தான சிறு தானியம். இதில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவு வகையாகும். இதை தோசையாகச் செய்து சாப்பிடுவது, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு கூழ், கேழ்வரகு அடை வரிசையில் வித்தியாசமான சுவையில் கேழ்வரகு தோசை ரெசிபியை பார்க்கப் இருக்கிறோம்.
சாதாரணமாக நாம் இட்லிக்கு அரைக்கும் மாவு போலவே, இந்த மாவையும் அரைக்க வேண்டும், ஆனால் இதற்கு கிரைண்டர் தேவை இல்லை, மிக்ஸி இருந்தாலே போதும். மொறு மொறுவென்று தோசை வார்க்கும் அளவிற்கு சத்துள்ள சுவையான தோசை மாவு ரெடி ஆகிவிடும். வழக்கமான தோசையை விட சற்று வித்தியாசமான சுவையிலும், அதிக சத்துக்களுடனும் கேழ்வரகு தோசையை சுலபமாகவும், சுவையாகவும் செய்வது எப்படி? என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.
– Advertisement –
கேழ்வரகு தோசை தேவையான பொருட்கள் :
கேழ்வரகு – 1 கப்
இட்லி அரிசி – 1/4 கப்
உளுந்து – 1/4 கப்
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1-2 (நறுக்கியது)
இஞ்சி – சிறு துண்டு (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்/நெய் – தோசை சுடுவதற்கு
கேழ்வரகு தோசை செய்முறை விளக்கம் :
முதலில் கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கழுவி, குறைந்தது 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும், இந்தக் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு மிக்ஸியில் விட்டு விட்டு அரைத்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது நீர்த்ததாகவோ இருக்கக் கூடாது. அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
– Advertisement –
பின்னர், இந்த மாவை 8-12 மணி நேரம் புளிக்க விடவும். மாவு நன்கு புளித்த பிறகு தான் தோசை மிருதுவாகவும், சுவையாகவும் வரும். புளித்த மாவை பயன்படுத்துவதற்கு முன், மெதுவாகக் கலக்கி விடவும். தோசை சுடுவதற்கு முன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மற்றும் சீரகம் (விருப்பப்பட்டால்) ஆகியவற்றை புளித்த மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின் அடுப்பில் தோசை கல்லை மிதமான சூட்டில் வைத்து, சிறிது எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை ஊற்றி மெலிதாக வட்டமாகப் பரப்பவும்.
இதையும் படிக்கலாமே:
ஹனுமன் ரகசிய வழிபாடு
சுற்றிலும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு, ஒரு மூடி போட்டு 1-2 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் திருப்பிப் போட்டு மறுபக்கம் பொன்னிறமாகும் வரை சுடவும். சுடச்சுட தயாரான கேழ்வரகு தோசையை தேங்காய் சட்னி, காரச் சட்னி, புதினா சட்னி, அல்லது சாம்பார் போன்றவற்றுடன் பரிமாறலாம். இது ஒரு முழுமையான மற்றும் சுவையான உணவாக இருக்கும். இந்தக் குறிப்புகளைப் பின்பற்றி நீங்களும் உங்கள் வீட்டில் சுவையான கேழ்வரகு தோசையை செய்து அசத்தலாம்!