“ரோட்டு கடை சால்னா” வீட்டிலேயே எப்படி சுவையாக எளிமையான முறையில் தயாரிக்கலாம் பார்ப்போமா?

Samayal Kurippugal

ரோட்டோர கடைகளில் கிடைக்கும் பரோட்டா சால்னாவின் சுவை தனித்துவமானது. சட்னி, சாம்பாரை விட இட்லி, தோசை, சப்பாத்திக்கு சால்னா கொடுத்தால் அதைவிட ஒரு பெஸ்ட் காம்பினேஷன் இருக்க முடியாது. குறிப்பாக, சாயங்கால நேரத்தில் பரோட்டாவை சுடச்சுட சால்னாவில் முக்கி சாப்பிடும் அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது. அதே சுவையை வீட்டிலேயே கொண்டு வர ஒரு எளிய செய்முறையை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரோட்டு கடை சால்னாவிற்கு அரைக்கத் தேவையான பொருட்கள்:
தேங்காய் – 1/2 மூடி
முந்திரி – 5-6
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 4-5 பல்
பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன்

– Advertisement –

தாளிக்க மற்றும் சமைக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – 1 (பெரியது, நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1.5 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
தனியா தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 1
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – அலங்கரிக்க

ரோட்டு கடை சால்னா செய்முறை விளக்கம்:
முதலில், அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் சால்னாவின் சுவைக்கான முக்கிய ரகசியம்! ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
பிறகு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இப்போது, நறுக்கிய தக்காளியையும், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு மசிய வதக்கவும்.

– Advertisement –

அடுத்து, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலா வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அதன்பின், நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து, 2 நிமிடம் நன்றாகக் கிளறி விடுங்கள். தேவையான அளவு தண்ணீர் (சுமார் 2-3 கப்) சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். சால்னா சற்று நீர்க்க இருந்தால் தான், பரோட்டாவுக்குப் பொருத்தமாக இருக்கும். ரொம்பவும் கெட்டியாக இருந்தால் சரியாக வராது.

இதையும் படிக்கலாமே:
குலச்சிறை நாயனார் குருபூஜை

கடைசியாக, மூடி போட்டு, எண்ணெய் மேலே மிதந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். இதுதான் சரியான பதம். சுவையான சால்னா தயாரானதும், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும். இந்தச் சால்னா பரோட்டா, இட்லி, தோசை, சப்பாத்தி, வெஜிடபிள் பிரியாணி என எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக, சுடச்சுடச் செய்த பரோட்டாவுடன் இதைச் சாப்பிட்டுப் பாருங்கள், உங்கள் வீட்டில் இனி ரோட்டுக் கடை பரோட்டா சால்னாதான் ஃபேமஸ். இந்த மசாலா வாசனை சமைக்கும் போதே வீடே ரோட்டுக் கடை போல மணக்கும். நீங்களும் இதே முறையில் ட்ரை பண்ணி பாருங்க உங்க வீட்டில் இருக்கும் அனைவரின் பாராட்டையும் பெறலாம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.