அரசி வாழ்க்கையை குழி தோண்டி புதைத்த பாண்டியனின் மருமகள்கள்.. தங்கமயிலை அவமானப்படுத்திய சரவணன் – Cinemapettai

Tamil Cinema News

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் போலீ நகை போட்டு வந்திருக்கிறார் என்ற விஷயம் ராஜி மற்றும் மீனாவுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் இந்த உண்மையை யாரிடமும் சொல்லாமல் தங்கமயிலின் வாழ்க்கைக்காக மறைத்து விட்டார்கள். அடுத்ததாக தங்கமயில் 12 ஆம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறார்.

காலேஜில் எந்த படிப்பும் படிக்கவில்லை, ஆனாலும் தன்னையும் தன் குடும்பத்தையும் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் என்ற விஷயமும் சரவணனுக்கு தெரிந்து விட்டது. இதனால் மொத்த குடும்பத்தையும் முட்டாளாக்கிய தங்கமயிலை அம்மா வீட்டில் போய் விட்டுட்டு வந்தார். அதோடு தங்கமயில் இடம் பேசாமல் ஒதுங்கி வந்த சரவணனுக்கு தற்போது அதிர்ச்சி தரும் விஷயமாக தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த விஷயத்தை போனில் சொல்லும் பொழுது அதை நம்பாமல் வீட்டிற்கு வருவதற்காக மறுபடியும் என்னை பொய் சொல்லி ஏமாற்ற பார்க்கிறாயா? என்று சரவணன் கோபமாக திட்டி விட்டார். இதைக் கேட்ட பாக்கியம், இனியும் இங்கு இருந்தால் சரிப்பட்டு வராது என்று தங்கமயிலே கூட்டிட்டு நேரடியாக கோமதி வீட்டுக்கு வந்து விடுகிறார். வந்ததும் தங்கமயில் கர்ப்பமான விஷயத்தை சொல்லி ராஜி மற்றும் கோமதிக்கு சந்தோஷத்தை கொடுத்து விடுகிறார்.

அத்துடன் கோமதி, பாண்டியனுக்கு போன் பண்ணி சரவணனையும் கூட்டிட்டு வீட்டுக்கு வர சொல்கிறார். வந்ததும் இவர்களிடமும் தங்கமயில் கர்ப்பமான விஷயத்தை சொல்கிறார். ஆனால் சரவணன் முகத்தில் சந்தோஷமே இல்லாமல் என்ன சொல்வது என்று தெரியாமல் ரூம்குள் போய் விடுகிறார். பிறகு ரூம்குள் போன தங்கமயில் சந்தோஷமாக கர்ப்பமான விஷயத்தை சொல்கிறார்.

ஆனால் இதை எப்படி நம்புவது என்று சரவணன் வார்த்தைகளால் தங்கமயிலை காயப்படுத்தி விடுகிறார். என்னையும் இந்த குடும்பத்தையும் மறுபடியும் ஏமாற்றுவதற்காக நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று தங்கமயில் சொல்வதை நம்பாமல் அவமானப்படுத்தி விட்டார். பிறகு தங்கமயிலுக்கு வேற வழி இல்லை, கர்ப்பமானதை செக் பண்ணி பார்த்த அந்த டியூப்பை சரவணன் இடம் காட்டி அழுது புலம்பி நான் பொய் சொல்லவில்லை என்னை நம்புங்கள் என சொல்கிறார்.

அதன் பிறகு சரவணன் நம்பிக்கை வைத்து சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார். சொன்ன ஒரு பொய்யால் உண்மையை சொன்னால் கூட சரவணன் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு தர்ம சங்கடமான இடத்தில் தான் தங்கமயில், சரவணனை விட்டிருந்தார். ஆனால் தற்போது எல்லாம் சரியாகிவிட்டது என்பதற்கு ஏற்ப சரவணன் அப்பா ஆகிய சந்தோஷத்தை பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள்.

ஆனால் இதற்கு இடையில் அரிசி வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டதை அனைவரும் மறந்து விட்டார்கள். முக்கியமாக குமரவேலு மற்றும் அரசிக்கும் கல்யாணம் நடக்கவில்லை என்று மீனா மற்றும் ராஜிக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும் அரசி வாழ்க்கையை காப்பாற்றுவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காமல் கமுக்கமாக இருப்பது அரசி வாழ்க்கையை வீணடிப்பது போல் இருக்கிறது. இந்த அரசியும் குமரவேலுவை பழி வாங்குகிறேன் என்று தன்னுடைய வாழ்க்கையை மொத்தமாக குழி தோண்டி புதைத்து விட்டார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.