ஆரம்பிக்கும் முன்பே வாய்க்கொழுப்பு முத்திய இங்கிலாந்து அணி.. உப்புசப்பு, ஒயிட் வாஸ் நேரம்ன்னு செய்யும் வம்பு – Cinemapettai

Tamil Cinema News

நாளை தொடர்கிறது இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டி. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில்தான் இந்தியாவை இஷ்டத்துக்கு வம்பு இழுத்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள் இங்கிலாந்து அணியினர்.

இந்திய அணி கூட விளையாடுவது எங்களுக்கு வெறும் பயிற்சி போட்டி தான். ஆஸ்திரேலியா உடன் மோதும் ஆசஸ் தொடருக்கு இது நல்ல ட்ரெய்னிங்காக அமையும். மத்தபடி இந்திய அணியுடன் விளையாடுவது சிறப்பம்சம் கிடையாது.அதுவும் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாத இந்திய அணி உப்பு சப்பு இல்லாத அணி என்று வாய்சாவடால் விட்டு வருகிறார்கள்.

உலக கோப்பை போட்டிகளை விட எங்களுக்கு ஆசஸ் தொடர் தான் முக்கியம். இந்தியா போன்ற அணியுடன் விளையாடிய பின் அந்த தொடருக்கு சென்றால் நன்றாக இருக்கும். வலுவான இந்திய அணி இல்லாவிட்டாலும் அவர்களுடன் விளையாடி வெல்வது எங்களது வீரர்களின் மனவலிமையை ஊக்குவிக்கும்.

இந்திய அணியை 4-1 என்ற கணக்கில் வெல்வோம் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்தால் ஒரு போட்டியில் வெல்வார்கள் அதுவும் இல்லை என்றால் மொத்தமாய் ஒயிட் வாஷ் செய்து அனுப்பி விடுவோம். மேலும் நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுவது மிகப்பெரிய பலம் என்று கூறி வருகிறார்கள்.

முன்னாள் சுழற்பந்து பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் மற்றும் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்ரோக்ஸ் இருவரும் போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியை வென்றது போன்ற பேச்சுக்களை வெளிப்படுத்துகிறார்கள். அனுபவம் இல்லாத இளம் படைகளோடு செல்கிறது இந்திய அணி. இதனால் அவர்கள் இஷ்டத்துக்கு பேசி தொடங்குவதற்கு முன்பே வம்பு செய்கிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.