ஆர்சிபி பெங்களூர் அணிக்கு ரேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சு.. ஓவர் ஆட்டத்தால் பரிதவித்த ஓனர் எடுத்த விபரீத முடிவு – Cinemapettai

Tamil Cinema News

17 வருடங்கள் கழித்து 18 வது சீசனில் ஆர்சிபி அணி முதல் முதலாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அணில் கும்ப்ளே, டிராவிட், டு ப்ளஸ்சி என மாறி மாறி கேப்டன்கள் வந்த போதிலும் அந்த அணியின் அடையாளம் விராட் கோலி தான். இப்பொழுது ரஜத் படிதார் தலைமையில் இந்த ஆண்டு கோப்பையை வென்றுள்ளது.

ஆரம்பத்தில் இந்த அணியை கட்டமைத்தவர் விஜய் மல்லையா. ஆனால் அதன் பிறகு கடன் பிரச்சனையில் தவித்து வந்த மல்லையா வெளிநாடு போய் செட்டில் ஆகிவிட்டார். இந்தியாவில் இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. குறிப்பாக வங்கிகளில் அதிகமாக கடன் பெற்று அதைக் கட்ட முடியாமல் தவித்து வந்தார்.

இப்பொழுதும் இவர் தான் பெங்களூர் அணிக்கு பினாமியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்ற பேச்சுக்களும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது உயிர் சேதங்கள் ஏற்பட்டு பிரச்சனைக்கு உள்ளானது.

இந்நிலையில் பிரச்சனை எல்லை மீறி சென்றதால் பெங்களூரு அணியில் உரிமையாளரான டியாகோ அணியை விற்க முடிவெடுத்திருக்கிறார். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்னும் மதுபான நிறுவனத்தை நடத்தி வருகிறது இந்த நிறுவனம். இப்பொழுது தொடர்ந்து பிரச்சினைகள் வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆர் சி பி அணியின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 17,000 கோடிகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வளவு தொகை கொடுத்து வேறு யாராவது ஒருவர் வாங்கினால் மொத்தமாக அந்த அணியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிடும். இதனால் அந்த அணியின் பெயர் கூட மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.