இசையின் நாயகன் இளையராஜா.. பாடலை தாண்டி ஏ ஆர் ரகுமான் முதல் மணிரத்னம் வரை பங்கமாய் பண்ணிய 5 சம்பவங்கள்! – Cinemapettai

Tamil Cinema News

Ilaiyaraja: இளையராஜாவை இசையின் கடவுள் என்று சொன்னால் கூட மிகை ஆகாது. திறமை இருக்கும் இடத்தில் கொஞ்சம் திமிரு சேர்ந்தே இருக்கும் என்பதற்கு இவர்தான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று கூட சொல்லலாம்.

மூன்று தலைமுறைகளாக இவருடைய இசையை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். அதே சமயத்தில் தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களுடன் கூட பங்கமான சம்பவம் செய்திருக்கிறார் அப்படிப்பட்ட ஐந்து சம்பவத்தை பார்க்கலாம்.

எஸ் பி பாலசுப்ரமணியம்: இளையராஜா சினிமாவுக்கு வருவதற்கு முன்பே எஸ் பி பாலசுப்ரமணியத்துடன் அவருக்கு நல்ல நட்புறவு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் வாய்ப்பு தேடி செல்லும் பல இடங்களுக்கு இளையராஜாவுக்காகவும் வாய்ப்பு கேட்க அவரையும் அழைத்து சென்று இருக்கிறார்.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் இசையமைத்த பாடல்களை என் உரிமை இல்லாமல் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெளிநாடு கச்சேரிகளில் பாடக்கூடாது என சட்ட ரீதியாக தடை போட்டார்.

சில வருடங்கள் கழித்து எஸ் பி பாலசுப்ரமணியம் எந்த ஒரு மன கசப்பும் இல்லாமல் இளையராஜாவுடன் சகஜமாகவே பேச ஆரம்பித்து விட்டார்.

ஏ ஆர் ரகுமான்: ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு கிட்டத்தட்ட 500 படங்களில் இளையராஜாவுக்கு உதவியாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

ஏ ஆர் ரகுமானுக்கு, ரோஜா படத்தில் இசையமைப்பாளராக வாய்ப்பு கிடைத்த போது இளையராஜா அதை பல வகையிலும் தடுத்தார் என நிறைய செய்திகள் இருக்கிறது.

ஆனால் இளையராஜாவின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது ஏ ஆர் ரகுமான் ரொம்பவும் சகஜமாக அந்த விழாவில் கலந்து கொண்டார்.

பாரதிராஜா: இளையராஜா மற்றும் பாரதிராஜாவுக்கு இடையே சினிமாவுக்கு முன்பிருந்தே நெருங்கிய நட்பு இருந்தது. நெருங்கிய நட்பு என்பதால் தான் என்னவோ இவர்களுக்குள் அடிக்கடி மன கசப்பு ஏற்பட்டது.

இவர்களுக்குள் பிரச்சனை வரும் போதெல்லாம் பாரதிராஜா தன்னுடைய படங்களில் இளையராஜாவுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டார். இதற்கிடையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் இருவரும் பேசாமல் இருந்து வந்தார்கள்.

வைரமுத்து: இளையராஜாவின் பாடல்கள் வெற்றி பெற்றதற்கு பாதிக்கு பாதி வைரமுத்துவின் வரிகளும் காரணமாக இருந்தது. தொடர்ந்து இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாகவும் வலம் வந்தது.

ஒரு பாடல் பதிவின்போது தன்னுடைய இசைக்கு, வைரமுத்து எழுதிய வரிகள் சரியாக அமையவில்லை என அதை இளையராஜா புறக்கணித்தவர். இருவரும் அதன் பின்னர் இணைந்து பணியாற்றவே இல்லை.

மணிரத்னம்: இளையராஜா மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் தளபதி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் இளையராஜா இசை விஷயத்தில் மணிரத்தினத்தின் விருப்பத்தை கேட்காமல் அதிக தலையீடு காட்டினார். இதனால் மணிரத்தினம் அதன் பின்னர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றவில்லை.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.