இனியாவிற்கு வந்த சந்தேகம், சுதாகர் செய்த துரோகம்.. பாக்கியா கோபியை சேர்த்து வைக்க ஈஸ்வரியின் டிராமா – Cinemapettai

Tamil Cinema News

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், புருஷன் பொண்டாட்டி சந்தோஷமாக இருக்கும் பொழுது அதை பார்த்து கடுப்பாகிய ஈஸ்வரி தற்போது கோபி யாரும் இல்லாமல் தனியாக இருக்கிறார் என்று நினைத்து பீல் பண்ணுகிறார். இதனால் பாக்கியம் மற்றும் ராதிகாவுடன் பேசி மறுபடியும் கோபியை சேர்த்து வைக்கலாம் என்று முயற்சி எடுத்தார்.

அந்த முயற்சியும் தோற்றுப் போய்விட்டது, கடைசியில் ராதிகாவிடம் பேசிட்டு வந்த ஈஸ்வரிடம் கோபி கோபமாக சண்டை போட்டுவிட்டார். இதனால் கோபத்தில் இருக்கும் ஈஸ்வரியை சமாதானப்படுத்த கோபி வந்த பொழுது ஈஸ்வரி பேசாமல் ரூமை விட்டு வெளியே வராமல் கோபியை கஷ்டப்படுத்தி விடுகிறார். பிறகு கோபி வெளியே கிளம்பிய நிலையில் பாக்யாவிடம் வந்து என்னை வாய்க்கு வந்தபடி திட்டிட்டு இப்ப வந்து சமாதானப்படுத்துகிறானா?

யாருக்கு வேணும் அவனுடைய சமாதானம் என்று சொல்லி மறுபடியும் ரூம்குள்ளே ஈஸ்வரி போய்விடுகிறார். இதையெல்லாம் பார்த்த பாக்கியா என்ன பண்ணுவது என்று தெரியாமல் தாத்தா போட்டோவை பார்த்து பீல் பண்ணுகிறார். அடுத்ததாக நித்திஷ் என்ன ஆனார் எப்படி இருக்கிறார் என்பதை பார்ப்பதற்காக இனியா சுதாகர் ரூம் கதவை திறக்க முயற்சி எடுக்கிறார். ஆனால் அந்த ரூம் திறக்காத படி லாக் ஆகி இருந்தது.

அப்பொழுது அங்கே வந்த சுதாகரின் மனைவி இனியாவிடம் சண்டை போடுகிறார். எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என்று இனியாவிடம் சொல்லும் பொழுது இனிய, உங்க பையன் மீது ஏதோ தவறு இருக்கிறது. அதை என்னிடம் மறைக்கிறீங்க நான் என்னவென்று கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி விடுகிறார். அந்த வகையில் சுதாகர், உன் பையனை சீக்கிரம் திருந்தி ஒழுங்கா வாழ சொல்லு.

இல்லையென்றால் உன் பையன் வேண்டாம் என்று இனியா போய்க்கொண்டே இருப்பாள் என்று சந்திரிகாவிடம் சொல்கிறார். ஆக மொத்தத்தில் சுதாகர், நிதீஷ் குடிகாரன் என்று என்று தெரிந்தே இனிய தலையில் கட்டி வைத்து துரோகம் செய்து இருக்கிறார். அடுத்ததாக பாக்கியா வேலை விஷயமாக நடுரோட்டில் போய்க் கொண்டிருக்கும் பொழுது ரோட்டில் வந்த ஒரு நபர் மயக்க போட்டு விழுந்து விடுகிறார்.

அந்த நபரை காப்பாற்றும் விதமாக பாக்கியா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் சரி பண்ணி விடுகிறார். இதனை அடுத்து பாக்கியா ஹோட்டலில் இருக்கும் பொழுது லோக்கல் கவுன்சிலர் பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்து நீங்கள் காப்பாற்றிய நபர் என்னுடைய மனைவிதான். ரொம்ப நன்றி என்று சொல்லி செய்த தவறுக்கு மன்னிப்பையும் கேட்டுவிட்டு போய்விடுகிறார்.

இதையெல்லாம் தாண்டி தனிமையில் இருக்கும் கோபிக்கும் பாக்யாவுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று ஈஸ்வரி முயற்சி செய்கிறார். இதற்காக சின்ன சின்ன டிராமா போட்டு பாக்யாவையும் கோபியும் நம்ப வைத்து இருவரையும் சேர்த்து வைக்க போகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.