இனியா எடுத்த முடிவுக்கு பின் இருக்கும் காரணம்.. கோபி மீது சந்தேகப்படும் பாக்கியா – Cinemapettai

Tamil Cinema News

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவிற்கு சுதாகர் குடும்பத்தை பற்றி நன்றாக தெரிந்து விட்டது. போ**தை பழக்கத்திற்கு அடிமையான நித்தேஷ் ஜெயிலில் ஆறு மாசம் இருந்த பிறகு சுதாகர் பணம் கொடுத்து மகனை வெளியே எடுத்து இருப்பதை தெரிந்துகொண்ட இனியா இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்லி மனக்கஷ்டத்தை கொட்ட வேண்டும் என்று நினைத்தார்.

அந்த வகையில் இனியாவிற்கு எப்பொழுதும் சப்போர்ட்டாக இருக்கும் கோபி இடம் சொல்லி விடுகிறார். கோபிக்கு, சுதாகர் குடும்பத்தையும் நித்தீஷ் பற்றிய விஷயத்தையும் தெரிந்து உடனே அதிர்ச்சியாகிவிட்டார். அது மட்டும் இல்லாமல் இப்பொழுது நான் என்ன முடிவு எடுக்க வேண்டும், அதுவும் நீங்களே சொல்லுங்க என்று இனியா மொத்த பாரத்தையும் கோபி தலையில் வைத்து விட்டார்.

உடனே கோபி ஒரு பொறுப்பான அப்பாவாக முடிவெடுக்கும் பொறுப்பில் இனியாவை வீட்டுக்குள் கூட்டிட்டு போய் சுதாகரிடம் உங்க பையன் விஷயத்தை மறைத்து என் தலையில் இப்படி ஒரு இடியை தூக்கி போட்டு விட்டீர்களே என்று கேள்வி கேட்டார். கோபிக்கும் இனியாவுக்கும் எல்லா விஷயமும் தெரிந்து விட்டது என்று சுதாகர் நித்தீஷ் அதிர்ச்சியாகி விட்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் கோபி, இனியும் என் மகள் உங்களுடைய வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை நான் கூட்டிட்டு போகிறேன் என்று பிடிவாதமாக சொல்லி விடுகிறார். ஆனால் இனியா, கோபி தனியாக கூட்டிட்டு போய் நான் உங்களுடன் வந்து விட்டால் அம்மாவும் பாட்டியும் ரொம்பவே கஷ்டப்படுவாங்க. அதனால் இப்போதைக்கு நான் இங்கே இருந்து கொள்கிறேன். என்னை யாரும் இங்கே கஷ்டப்படுத்தவில்லை.

என்னால் இங்கே இருக்க முடியவில்லை என்று எப்பொழுது நான் உங்களிடம் சொல்கிறேனோ அப்பொழுது என்னை கூப்பிட்டு போங்க என்று சொல்லிவிடுகிறார். உடனே கோபி, சுதாகர் குடும்பத்தை எச்சரிக்கை கொடுத்துவிட்டு இனியாவை விட்டுட்டு போய் விடுகிறார். அந்த வகையில் இனியவை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக சுதாகர், மகள் போல பாசத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்.

இதனை தொடர்ந்து இனியாவின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று கோபி வருத்தத்துடன் இருக்கிறார். ஆனால் இது எதுவும் தெரியாதா ஈஸ்வரி, சுதாகர் வீட்டில் இனியாவின் பிறந்தநாளை கொண்டாடியதை நினைத்து சந்தோஷப்படுகிறார். ஆனால் கோபி முகத்தில் ஏதோ ஒரு சோகம் தெரிகிறது என்று சந்தேகப்பட்ட பாக்யா, கோபியை கூப்பிட்டு இனியாவிற்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார்.

ஆனால் கோபி, பாக்கியாவிற்கு விஷயம் தெரிந்தால் கஷ்டப்படுவார் என்பதற்காக இனியா பற்றிய விஷயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறார். அடுத்த நாள் இனியவை சந்தித்த கோபி நீ எதற்காக அந்த வீட்டில் கஷ்டப்பட வேண்டும். என்னுடன் நம்ம வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார். ஆனால் இனியா வர மறுத்துவிட்டு பாக்கியா மற்றும் ஈஸ்வரி பாட்டியிடம் உண்மையை சொல்லக்கூடாது என்று கோபியிடம் சத்தியம் வாங்கி விடுகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.