இருக்கிற பிரச்சினைல இந்த போட்டோ தேவையா.? சூர்யாவை மாட்டிவிட்ட கண்ணப்பா – Cinemapettai

Tamil Cinema News

Suriya: சும்மா இருந்த வாய்க்கு மெல்லுறதுக்கு அவல் கொடுத்த கதையா சூர்யா இணையவாசிகளுக்கு தேடி வந்து கன்டென்ட் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆட்சியில் நீட் தேர்வு குறித்து சூர்யா பொங்கி எழுந்து பேசி இருந்தார்.

இந்த ஆட்சியில் எந்த ஒரு சமூக அவலங்களுக்கும் குரல் கொடுக்க மறுக்கிறார் என ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் இந்தி எதிர்ப்பு படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார், மனைவி இந்தி சினிமாவில் கவனம் செலுத்துகிறார் என தொடர்ந்து நெகட்டிவிட்டி தான்.

சூர்யாவை மாட்டிவிட்ட கண்ணப்பா

கடந்த வியாழக்கிழமை திருப்புவனம் ஊரில் சந்தேகத்தின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறை விசாரணையில் மரணமடைந்திருக்கிறார்.

இது குறித்து எந்த நடிகர்களும் பேசவில்லை குறிப்பாக கடந்த ஆட்சியில் தன்னுடைய பேச்சில் அதிக அளவு அரசியல் கலந்து பேசிய சூர்யா வாயை மூடிக் கொண்டிருக்கிறார் என கடந்த இரண்டு தினங்களாகவே அவரை போட்டு வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் கண்ணப்பா படத்திற்காக சூர்யா விஷ்ணு மஞ்சுவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சூர்யா அனுப்பிய பூங்கொத்து மற்றும் அவருடைய கடிதத்தை புகைப்படம் எடுத்து விஷ்ணு மஞ்சு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்து விட்டார்.

Suriya (1)
Suriya (1)

சூர்யாவுக்கு ஒரு படம் பார்த்து வாழ்த்து தெரிவிக்க எல்லாம் நேரம் இருக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு குரல் கொடுக்க நேரமில்லையா. இந்த ஆட்சியில் சூர்யா எதிலும் தலையிடாமல் சுயநலத்துடன் நடந்து கொள்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி என தற்போது இணையவாசிகள் மீண்டும் சூர்யா பற்றி நெகட்டிவ் ஆக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.