எதிர்நீச்சல் போட கூண்டை விட்டு பறந்து போன வளர்ப்பு கிளி.. கதிர், குணசேகரனை பந்தாடிய பத்திரகாளி – Cinemapettai

Tamil Cinema News

எதிர்நீச்சல் இரண்டில் குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி மனதிற்குள் ஒருவர் மீது ஒருவர் வன்மத்தை வைத்து சுற்றித் திரிகிறார்கள். அறிவுக்கரசி குணசேகரன் வீட்டில் சம்பந்தம் செய்தாலும் கூட குணசேகரனையும், கதிரையும் நம்பாமல் நேரம் கிடைக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக திட்டம் போட்டு வருகிறார்.

தர்ஷன் மற்றும் அறிவுக்கரசியின் தங்கை திருமணம் நடந்த பிறகு தன்னுடைய முழு விஸ்வரூபத்தையும் பார்ப்பார்கள் என அடிக்கடி அறிவு கூறி வருகிறார். இதனிடையே இந்த கல்யாணத்தை சீக்கிரமாக முடிப்பதற்கு அறிவுக்கரசி பல திட்டங்களை போட்டு வருகிறார்.

அதன் ஒரு கட்டமாக தன்னுடைய தங்கையை அடிக்கடி தர்ஷன் சந்திக்குமாறு செய்கிறார். ஆனால் தர்ஷன் மனதில் அவர் முன்பு விரும்பிய பார்கவி மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. மேலும் தர்ஷன் தன்னுடைய அரியர்களை கிளியர் பண்ண பார்கவி பெரிதும் பாடுபட்டார். இதனாலும் தர்ஷனுக்கு அவர் மீது பாசம் வந்துவிட்டது.

காலேஜுக்கு பார்கவியை பார்க்க செல்லும் தர்ஷன் அறிவுக்கரசியின் தங்கையை விட்டு ஓட்டம் பிடிக்கிறார் இதனால் கடும் கோபமடைந்து பத்திரகாளியாக மாறிவிட்டார் அறிவுக்கரசி. தர்ஷன் கையில் கிடைத்தால் அவனை சும்மா விடமாட்டேன் என கதிர் மற்றும் குணசேகரன் இடமே சவால் விடுகிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி மகனுக்காக பாசப் போராட்டம் நடத்தி வருகிறார், என் மகன் கிடைக்காவிட்டால் யாரையும் சும்மா விடமாட்டேன் என அவரும் ஒருகை பார்ப்பதற்கு தயாராகி விட்டார். குணசேகரன் தன்னுடைய ஆட்களையும், தம்பிகளையும் அனுப்பி தர்ஷனை இழுத்து வர உத்தரவு போட்டுள்ளார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.