எதிர்நீச்சல் 2 சீரியலில் குணசேகரனிடம் வசமாக சிக்கிய ஈஸ்வரி.. ஜீவானந்தம் வலையில் அல்லக்கை – Cinemapettai

Tamil Cinema News

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஜீவானந்தம் வந்தா தான் எதிர்நீச்சல் சீரியலில் விறுவிறுப்பும் மருமகள்களுக்கு சப்போர்ட்டும் கிடைக்கும் என்பதற்கு ஏற்ற மாதிரி தற்போது ஜீவானந்தம் எல்லா பிரச்சனையும் தீர்ப்பதற்கு என்டரி கொடுத்துவிட்டார். அதாவது ஜீவானந்தம் தங்கி இருக்கும் கொடைக்கானலுக்கு பார்க்கவியும் வாத்தியாரும் வந்து விட்டார்கள்.

அதே கொடைக்கானலுக்கு தர்ஷன், குணசேகரனை ஏமாற்றிவிட்டு தஞ்சம் அடைந்து விட்டார். தற்போது இவர்கள் அனைவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளாமலேயே ஜீவானந்தம் கஸ்டடியில் இருக்கும் அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் தர்ஷனை பார்த்ததும் அறிவு குணசேகரனிடம் பையன் சிக்கிக்கொண்டான். அதனால் கல்யாண வேலைகளை பார்க்கலாம் நாளைக்குள்ள நான் கூட்டிட்டு வந்து விடுவேன் என்று சந்தோசமாக சொல்கிறார்.

இந்த பக்கம் எல்லோரும் கண்ணிலும் மண்ணைத் தூவி பார்க்கவி வாத்தியார் தர்ஷன் மூன்று பேரையும் ஜீவானந்தம் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போய்விட்டார். இந்த விஷயம் அறிவு மூலம் குணசேகருக்கு தெரிய வரும் பொழுது இதற்கெல்லாம் பின்னணியில் இருந்து சதி பண்ணியது ஈஸ்வரி தான் என்று நினைத்து ஈஸ்வரியை வெளுத்து வாங்கப் போகிறார்.

இவர் மட்டுமில்லாமல் ஈஸ்வரி மீது சிறிது சந்தேகப்பட்ட சக்திக்கும் ஜீவானந்தம் மூலம் தான் தர்ஷனை மறைத்து வைத்தார் ஈஸ்வரி என்று சக்தியும் நம்ப போகிறார். இப்படி குணசேகரன் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதற்கெல்லாம் காரணம் நான்கு மருமகள் தான் என்று நம்பி மொத்த பழுயையும் தூக்கிப் போடப் போகிறார்கள். ஆனாலும் ஜீவானந்தம் வலையில் சிக்கிய பார்கவி தர்ஷனுக்கு இனி விமோசனம் கிடைத்து விடும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.