ஒரிஜினல் புத்தியை காட்டும் தங்கமயில், மீனாவுக்கு கிடைத்த பணம்.. ஏமாறப்போகும் பாண்டியனின் வாரிசு – Cinemapettai

Tamil Cinema News

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குறுக்கு வழியில் போகணும் என்று யோசித்தால் அப்பொழுதே நம்முடைய நிம்மதியை தொலைத்து விடுவோம் என்பதற்கு உதாரணம் செந்தில். அரசாங்க உத்தியோகத்தில் எப்படியாவது சேர்ந்து மாதம் சம்பளத்தை பெறவேண்டும் என்று மாமனார் பேச்சை கேட்டு பாண்டியன் கொடுத்த 10 லட்ச ரூபாய் பணத்தை வேலைக்காக மாமனாரிடம் கொடுத்தார்.

ஆனால் தற்போது பாண்டியனின் அக்கா, அரசி ஏமாற்றிப் போனதால் கல்யாண செலவுக்காக எங்களுக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டம் ஆகிவிட்டது. அந்த நஷ்டத்தை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று பாண்டியனிடம் கேட்டார். பாண்டியனும் பணத்தை தந்து விடுகிறேன் என்று சொல்லி செந்திலை பேங்கில் இருந்து பத்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துட்டு வா என்று சொல்லிவிடுகிறார்.

ஆனால் செந்தில் மொத்த பணத்தையும் மாமனாரிடம் கொடுத்ததால் அப்பாவிடம் பணத்தை எப்படி கொடுப்பது என்று தெரியாமல் கதிரிடம் உதவி கேட்டார். கதிரும் அண்ணனின் சூழ்நிலையை புரிந்து தெரிந்தவர்களிடம் பணத்தை கேட்டார். ஆனால் பணம் பெரிய தொகை என்பதால் செந்திலுக்கும் கிடைக்கவில்லை கதிருக்கும் கிடைக்கவில்லை.

இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் மீனாவிடம் ஐடியா கேட்கிறார். மீனா இதெல்லாம் வேண்டாம் என்று தான் அந்த பணத்தை ஒழுங்கா பேங்கில் போய் போடுங்க என்று சொன்னேன். எப்பொழுதுமே குறுக்கு வழியில் எதையும் பெறக்கூடாது. இப்பொழுது உங்களால் மாமா அவமானப்பட்டு நிற்கப் போறாங்க என்று கோபமாக செந்திலிடம் மீனா சொல்கிறார்.

உடனே செந்தில், என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. எங்கேயாவது ஓடிப் போகலாமா என்று தோன்றுகிறது என சொல்கிறார். உடனே மீனா, தாராளமாக போங்க அரசி பிரச்சனை, பண பிரச்சனை, நீங்க ஓடிப்போன பிரச்சினை எல்லாத்தையும் நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம். ஆனால் திரும்பி மட்டும் வந்து விடாதிங்க என்று கோபமாக சொல்லிவிட்டு ஆபீஸ்க்கு போய் விடுகிறார்.

அந்த சமயத்தில் பாண்டியன் போன் பண்ணி பணத்தை எடுத்துட்டு சீக்கிரம் வீட்டுக்கு வா என்று சொல்கிறார். உடனே செந்திலும் கதிரும் வேற வழியிலே உண்மையை சொல்லலாம் என்று வீட்டுக்கு போய் விடுகிறார்கள். வீட்டில் பாண்டியனின் அக்கா மாமா பணத்துக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் செந்தில் வந்ததும் பணத்தை கேட்கிறார்கள்.

ஆனால் செந்தில் உண்மையை சொல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் பொழுது பாண்டியன் பணம் எங்கே என்று கேட்டு திட்ட ஆரம்பித்து விடுகிறார். அந்த சமயத்தில் சரியாக மீனா வந்து பணம் என்னிடம் இருக்கிறது. ஆஃபீஸ் விஷயமாக நான் வங்கிக்கு போக வேண்டியதாக இருந்தது. அப்படியே இந்த பணத்தையும் எடுத்துட்டு வந்து விடுகிறேன் என்று இவர்களிடம் சொன்னேன்.

அதனால் நீங்கள் கேட்டபடி 10 லட்சம் ரூபாய் என்னிடம் இருக்கிறது என்று சொல்லி பாண்டியனிடம் கொடுத்து விடுகிறார். உடனே பாண்டியன் அந்த பணத்தை அக்காவிடமும் மாமாவிடமும் கொடுத்து வெளியே அனுப்பி விடுகிறார். மீனா இந்த பணத்தை லோன் போட்டு வாங்கி செந்திலை காப்பாற்றி இருக்கிறார். ஆனால் செந்தில், மாமனாரிடம் கொடுத்த பணத்திற்கு வேலை கிடைக்காமல் ஏமாந்து போய் நிற்கப் போகிறார்.

அப்பொழுதுதான் பாண்டியன் சொன்னதும் மீனா சொன்னதும் எவ்வளவு சரி என்று செந்திலுக்கு புரியவரும். இதற்கிடையில் பாக்கியம் சொன்னபடி புருஷனை தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு பண்ணிய தங்கமயில் சரவணன் இடம் நைசாக பேசி குழந்தை விஷயத்தை காட்டி வேற எதிலும் கவனம் செலுத்த விடாமல் வருகிறார்.

இதுதான் தங்கமயிலின் ஒரிஜினல் புத்தி, இதை மாற்ற முடியாது. சரவணனும் குழந்தை பாசத்தில் தங்கமயில் என்ன சொன்னாலும் அதை நம்பிக்கொண்டு வருகிறார்கள். அதனால் தான் செந்தில் கடைக்கு வா என்று கூப்பிட்ட பொழுது கூட கடைக்கு போகாமல் தங்கமயில் உடன் வெளியே போய் விடுகிறார். செந்தில், சரவணனுக்கு போன் பண்ணிய பொழுது கூட பேசவிடாமல் தங்கமயில் தடுத்து விடுகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.