குமரனுக்கு கிடைத்த ஆதாரம், விபத்து பண்ணிய பசுபதி.. காவிரிக்கு தெரியவந்த உண்மை, ஆக்ஷனில் விஜய் – Cinemapettai

Tamil Cinema News

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலா தற்கொலை விஷயத்தில் விஜய் மீது எந்தவித தவறும் இல்லை என்றாலும் பத்திரிகையாளர்கள் மற்றும் போலீஸ் வெண்ணிலா எடுத்த முடிவுக்கு விஜய் தான் காரணம் என்று கதை கட்டி விட்டார்கள். இதனால் உண்மையை கண்டுபிடிக்கும் வரை விஜய் தலைமறைமாக இருக்க வேண்டும் என்று லாயர் சொல்லிவிட்டார்.

அப்படி இருந்த பொழுதும் காவிரி செக்கப்புக்கு ஹாஸ்பிடல் வந்த பொழுது ஒரு அப்பாவாக விஜய் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக யாருக்கும் தெரியாமல் காவேரி கூட இருந்து எல்லா விஷயத்தையும் பார்த்து யாருக்கும் தெரியாமல் கெஸ்ட் ஹவுஸ்க்கு போய் விட்டார். பிறகு காவேரி, விஜய் ஞாபகமாக இருந்ததால் விஜய் தங்கி இருந்த ரூமுக்கு சென்று விஜய்யை நினைத்து பார்த்து பீல் பண்ணுகிறார்.

உடனே விஜயும் காவிரியும் போன் பேசிக்கொண்டு பாசத்தை கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு பக்கம் குமரன், ஹாஸ்பிடல் இருக்கும் நர்சுக்கு டிரஸ் தைத்திட்டு வந்து அந்த டிரஸ்களை கொடுத்து பணத்தை பெறுவதற்கு ஹாஸ்பிடலுக்கு வந்துவிட்டார். அப்படி பணம் வாங்கிட்டு திரும்ப போகும் பொழுது பசுபதி மற்றும் வெண்ணிலாவின் மாமா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு விடுகிறார்.

அந்த வகையில் வெண்ணிலவின் மாமா, உங்கள நம்பி வந்ததுக்கு என் மகளை இந்த கெதி ஆக்கிட்டீங்களே, பேசிகிட்டு இருந்த பொண்ண இப்படி மேல இருந்து தள்ளிவிட்டு அந்த பழியையும் விஜய் மீது தூக்கி போட்டு விட்டீர்களே, இதெல்லாம் நியாயமா என்று கேட்டதும் பசுபதியும் எல்லா விஷயத்தையும் உளறி விடுகிறார். இதையெல்லாம் மறைமுகமாக கேட்ட குமரன் மொபைலில் வீடியோவாக எடுத்து விட்டார்.

அதோடு போகாமல் பசுபதி சட்டையை பிடித்து, நீ செஞ்ச கொலைக்கு அநியாயமாக விஜய் மீது பழியை போட்டுட்டியே, உன்னை சும்மா விட மாட்டேன் என்று கத்த ஆரம்பித்து விட்டார். உடனே பசுபதி நீ என்ன சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க என்று சொல்லிய நிலையில் குமரன் என்னிடம் ஆதாரம் இருக்கு அதை வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

ஆதாரம் என்று சொன்னதும் பசுபதி பயந்து போய்விட்டார், உடனே குமரன் போய்க் கொண்டிருக்கும் பொழுது அவரை விபத்து பண்ணி கீழே தள்ளி விடுகிறார். அத்துடன் கீழே விழுந்த ஃபோனையும் பசுபதி எடுத்து ஆதாரத்தை அழித்து விடுகிறார். ஆனால் என்னதான் ஆதாரம் அழிந்தாலும் இதற்கிடையில் குமரன் வரும்பொழுது பசுபதிக்கு தெரியாமலேயே காவிரிக்கு போன் பண்ணி வெண்ணிலா மேலே இருந்து தற்கொலை செய்யவில்லை.

பசுபதி தான் மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு இருக்கிறான் என்ற உண்மையை சொல்லி விடுகிறார். சும்மாவே காவிரிக்கு பசுபதி மீது சந்தேகம் இருந்தது, இது எல்லாம் தெரிந்த நிலையில் இனி பசுபதியை சும்மா விடமாட்டார். அந்த வகையில் விஜய்க்கு தெரிந்த நிலையில் அதிரடி ஆக்ஷனில் இறங்கும் விதமாக சம்பவத்தை செய்து பசுபதியை ஜெயிலுக்கு அனுப்பி விடுவார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.