கோபத்தில் துப்பாக்கியை கையில் எடுத்த குணசேகரன்.. காவு வாங்கப் போகும் எதிர்நீச்சல் – Cinemapettai

Tamil Cinema News

எதிர்நீச்சல் : சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். எதிர்நீச்சல் பாகம்-1 லிருந்து இன்று வரை கொஞ்சம் கூட பரபரப்பு இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் ஒரு நாள் கூட நகர்ந்ததில்லை. இடையில் எதிர்நீச்சல் சீரியல் கொஞ்சம் தொய்வுடன் தான் சென்றது. ஆனால் தற்போது ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.

ஆமாம் இயக்குனர் அவர்கள் இப்போதுதான் கரெக்டான மைண்ட்ஸ்ட் இருக்கிறார் போல என்று கூறும் அளவிற்கு அடுத்தடுத்து விறுவிறுப்பாக கதைக்களத்தை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தர்ஷன் திருமணம் வேண்டாம் என்று அறிவுக்கரசின் பிடியிலிருந்து தப்பித்து சென்று விட்டான். தர்ஷனை ஆளாளுக்கு ஒவ்வொரு பக்கம் தேடி வருகின்றனர்.

தர்ஷனும் அந்த ஊரை விட்டு வேறு ஒரு ஊருக்கு சென்று விட்டான். அங்கு செலவிற்கு கூட திண்டாடும் தர்ஷன் தன் கழுத்தில் போட்டிருந்த செயினை அடகு கடையில் வைத்து செலவிற்கு பணம் வாங்கிக் கொள்கிறான்.

இது ஒரு பக்கம் இருக்க அறிவுக்கரசி பார்க்கவியை முடித்துக் கட்ட தீவிரமாக தேடி வருகிறார். இன்று வரையில் சக்தி யார் பக்கம் என்றே தெரியவில்லை. நடுத்தரமாக இருந்து கொண்டு அனைத்தையும் சமாளித்து வருகிறார் சக்தி.

வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் வெளியே செல்லக்கூடாது என்று வீட்டிலேயே சிறை பிடித்து வைத்துக் கொண்டு தொந்தரவு செய்து வருகிறார் ஆதி குணசேகரன். கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ஆதி குணசேகரன் தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியவில்லை.

இந்நிலையில் குணசேகரனை சந்திக்க வீட்டிற்கு ஒருவர் வருகிறார். அவர் குணசேகரிடம் பொருள் ஒன்றைத் தருகிறார். வீட்டில் உள்ள அனைவரும் குணசேகரனை சுற்றி இருக்க, அந்த பொருள் என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

அப்போது குணசேகரன் அந்த பொருளை பிரித்துப் பார்த்தார் அது ஒரு துப்பாக்கி அதை பார்த்ததும் அனைவருக்கும் பதைபதைத்து விட்டது. வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.

எத்தனை பேரை காவு வாங்க போகிறார்..

ஆதி குணசேகரன் அம்மா, என்னப்பா இதெல்லாம் என்று கேட்டதற்கு . எனக்கு தர்ஷனின் திருமணம் நன்றாக நடக்க வேண்டும். அதற்காக நான் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் காவு கொடுக்க தயார் என்று கோவமாக கூறிக்கொண்டு இந்த வீட்டை தாண்டி யாரும் அடி எடுத்து வைக்க கூடாது என்றும் கூறிக்கொண்டு துப்பாக்கியை சரி செய்து பார்க்கிறார் குணசேகரன்.

ஆதி குணசேகரன் இந்த திருமணத்தில் வீட்டை விட்டு பெண்களை வெளியேற்றினால் திருமணம் தடைபட்டு விடும் என்று உறுதியாக பெண்களை சிறைவாசம் வைத்து தன் காரியத்தை நடத்திக் கொள்ள தெளிவாக திட்டமிடுகிறார்.

குணசேகரன் நேரடியாக களத்தில் இறங்கி இருப்பது நன்றாகவே இருக்கிறது. அடுத்தடுத்து எபிசோடுகளில் தர்ஷன் யார் கைகளில் மாட்ட போகிறார்? பார்க்கவியின் நிலைமை என்ன? வீட்டில் உள்ள பெண்களின் நிலைமை என்ன? என்பதை வைத்து இந்த சீரியல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.