கோபிக்கு பொண்ணு பார்க்க போகும் ஈஸ்வரி.. சம்மதம் சொன்ன பாக்கியா, இனியா குடுத்த ஐடியா – Cinemapettai

Tamil Cinema News

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், வேலைக்கு போயிட்டு மாமனார் வீட்டுக்கு வந்த இனியா, வீட்டுக்குள் போக முடியாமல் கதவு அடைக்கப்பட்டிருந்தது. இதனால் வெளியே நின்று கொண்டிருந்த இனிய காலிங் பெல் அடித்தும் யாரும் கதவை திறக்கவில்லை. நித்தேஷ்க்கு போன் பண்ணியும் நித்தேஷ் இனியாவின் போனை எடுக்கவில்லை. இதனால் விடிய விடிய வாசலில் நிற்க முடியாது என்று முடிவு பண்ணிய இனிய நேரடியாக பாக்யா வீட்டிற்கு போய்விடுகிறார்.

ஆனால் சுதாகர், இனியாவே காணும் என்று பயந்து போய் கோபிக்கு போன் பண்ணுகிறார். கோபி இனிய இங்கே தான் வந்திருக்கிறாள். உங்ககிட்ட சொல்லலையா என்ன கேட்கிறார். அதற்கு சுதாகர் சொல்லிட்டு போனால் டென்ஷன் இல்லாமல் இருந்திருக்கும் ஏன் உங்க பொண்ணு எதையும் புரிந்துகொள்ள கொள்ள மாட்டாளா என்று கோபமாக பேசி விடுகிறார்.

பிறகு மறுநாள் இனியாவிடம் நீ ஏன் சொல்லாமல் வந்தாய் என்று கேட்ட பொழுது அம்மா வீட்டுக்கு வரணும் என்று ஆசையாக இருந்தது. அதனால் வந்தேன் என சொல்லி சமாளித்து விடுகிறார். ஆனாலும் நீ பண்ணியது தவறுதான் என்று ஈஸ்வரி சொல்லிய நிலையில் உன்னுடைய மாமனார் வீட்டுக்கு நாங்கள் மூன்று பேரும் வந்து மன்னிப்பு கேட்டு உன்னை விடுகிறோம் என கிளம்பி விடுகிறார்கள்.

அப்படி சுதாகர் வீட்டுக்கு இனியவை கூட்டிட்டு ஈஸ்வரி கோபி மற்றும் பாக்கியா போய்விடுகிறார்கள். இனிய தெரியாமல் ஏதோ தவறு பண்ணி விட்டால் மன்னித்து விடுங்கள் என்று கோபி மற்றும் ஈஸ்வரி மன்னிப்பு கேட்கிறார்கள். பிறகு நித்திஷ் அம்மா, உங்க இரண்டு பேத்துக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. ஆனாலும் ஏன் ஒன்றாக இருக்கிறீர்கள். அப்படின்னா உங்களுக்குள் என்ன உறவு என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு கோபி மற்றும் பாக்யா, எங்க பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் ஒன்றாக தான் இருப்போம் என்று பதில் சொல்கிறார்கள். பிறகு வீட்டிற்குள் வந்த ஈஸ்வரி, இனியாவின் மாமியார் கேட்டதும் சரிதான், பிள்ளைகளுக்காக நீங்கள் ஏன் ஒன்றாக வாழ கூடாது என்று பாக்யா மற்றும் கோபியை பார்த்து கேள்வி கேட்கிறார். அதற்கு கோபி இதை பற்றி நிறைய தடவை பேசி என்னுடைய முடிவையும் சொல்லிட்டேன், எனக்கு வேலை இருக்கிறது என்று கிளம்பி விடுகிறார்.

பிறகு பாக்கியா நானும் இதைப் பற்றி சொல்லிவிட்டேன். ஆனா நீங்க இதை பத்தி பேசுறது நிப்பாட்டவே மாட்டீங்க என பதில் கூறுகிறார். உடனே ஈஸ்வரி, இதுதான் உன்னுடைய முடிவு என்றால் என்னுடைய பையனுக்கு நான் வேறொரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைத்து விடுவேன் உனக்கு ஓகேவா என்று கேட்கிறார். அதற்கு பாக்கியம் எனக்கு முழு சம்மதம், முதலில் அந்த வேலையை பாருங்க. உங்க பையனுக்கு வேறொரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க. என்னை ஆள விடுங்க என்று சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக ஹோட்டலுக்கு வந்த பாக்கிய, இனியா கொடுத்த ஐடியாவின் படி ஹோட்டலில் ப்ரமோஷன் செய்ய வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் சாப்பிட்டு முடித்து பாட்டு பாடினால் 30% பில்லிலிருந்து தள்ளுபடி என்று நோட்டீசை ஒட்டி விடுகிறார். இதன் மூலம் பிசினஸ் நல்லா வளரும் லாபமும் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் பாக்கியம் இனிய சொன்னபடி செஞ்சு விடுகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.