சந்தியா ராகம் சீரியலில் கார்த்திக்கை வதம் செய்ய விஸ்வரூபம் எடுத்த ரகுராம்.. எண்டரி கொடுத்த ஜானகி – Cinemapettai

Tamil Cinema News

Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரியின் பழிவாங்கும் எண்ணம் அப்படியே கார்த்திக்கு வந்திருக்கிறது. அதனால் தான் கதிர் தனம் சந்தோசத்தை கெடுக்கும் விதமாக பல சதி வேலைகளை கார்த்திக் பார்த்து வருகிறார். அதனால் தனத்தை கார்த்திக் கடத்திட்டு போய் திருட்டு கல்யாணம் பண்ணுவதற்கு ஏற்பாடு பண்ணினார்.

இதை தெரிந்து கொண்ட கதிர், தனத்தை காப்பாற்றுவதற்காக போனார், ஆனால் கார்த்திக் கதிர் தலையில் அடித்து மயக்கம் போட வைத்துவிட்டார். பிறகு கதிரை உயிரோடு விட வேண்டும் என்றால் உன் கழுத்தில் நான் தாலி கட்டும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என்று தனத்தை பிளாக்மெயில் பண்ணினார். அதனால் தனமும் எதுவும் செய்ய முடியாமல் இருந்த நிலையில் கார்த்திக் தாலி கட்டுவதற்கு தயாராகி விட்டார்.

அந்த சமயத்தில் மாயா வந்து கார்த்திகை அடித்து தனத்தை காப்பாற்றி விட்டார். பிறகு மயக்கத்தில் இருந்த கதிரையும் எழுப்பி கார்த்திகை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வைத்து விட்டார். இந்த விஷயம் பஞ்சாயத்து மூலம் ரகுராமுக்கு தெரிய வந்துவிட்டது. அப்பொழுது ரகுராம், தனத்திடம் உன்னை கார்த்திக் கடத்தினது உண்மையா என்று கேட்டதும் தனம் நடந்த விஷயத்தை சொல்லிவிடுகிறார்.

பிறகு ரகுராம் ஊர் பஞ்சாயத்து ஆக முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்ததால் தனத்திடம் மன்னிப்பு கேட்டு இனி கார்த்திக் மூலம் எந்த தொந்தரவும் வராது என்று லெட்டர் எழுதிக் கொடுக்க சொன்னார். ஆனால் பஞ்சாயத்து தலைவராக முடிவெடுத்த ரகுராம் தனத்தின் அப்பாவாக கார்த்திக் செய்த தவறை தண்டிக்கும் விதமாக விஸ்வரூபம் எடுத்து கார்த்திக்கை வதம் செய்ய தயாராகி விட்டார்.

அந்த வகையில் கார்த்திக் இருக்கும் இடத்திற்கு சென்று ரகுராம் அடித்து தனத்தின் மீது இருக்கும் பாசத்தை முழுமையாக காட்டி விட்டார். பிறகு புவனேஸ்வரி மற்றும் கார்த்திக்கு எச்சரிக்கை கொடுத்து இனி தனத்தின் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக வராதபடி ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். அதே கோபத்துடன் வீட்டுக்கு வந்த ரகுராம் ஜானகியை பார்க்கிறார்.

ஜானகிக்கும் ரகுராம் ஏதோ செய்திருக்கிறார் என்று புரிந்து விட்டது. இருந்தாலும் தனத்தை காப்பாற்றிய மாயாவிற்கு ஜானகி நன்றி சொல்கிறார். இதற்கிடையில் ஜானகி கேரக்டருக்கு வேறு ஒரு புது ஆக்டர் வரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் ஜானகி கேரக்டருக்கு சந்தியா தான் கரெக்டாக இருப்பார் என்பதால் மறுபடியும் அவரை கூட்டிட்டு வந்து விட்டார்கள். இனி ரகுராமுக்கு அடுத்தடுத்து ஒவ்வொரு விஷயமும் தெரிய வரப்போகிறது. கதிரை மருமகனாக ஏற்றுக்கொண்டு மாயாவையும் புரிந்து கொள்ளப் போகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.