சாக்லேட் பாய் நடிகர் தான் மெயின் வில்லன்.. பலியாடு ஸ்ரீகாந்த், போ.. தை மருந்து விவகாரத்தில் பகீர் கிளப்பும் சுச்சி – Cinemapettai

Tamil Cinema News

Srikanth-Suchitra: இப்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவருடைய வாக்குமூலத்தில் பல தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதை வைத்து நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வட்டத்திற்குள் வந்திருக்கிறார்.

இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டு போலீசார் வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பாடகி சுசித்ரா தற்போது நாம் எதிர்பார்க்காத பல விஷயங்களை கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

ஏற்கனவே இவர் கமல் நடத்தும் பாட்டியில் என்னென்ன நடக்கும் என்பதை கூறியிருந்தார். ஆனால் அப்போது இந்த விஷயம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இப்போது ஸ்ரீகாந்த் சிக்கிய பிறகு போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

சாக்லேட் பாய் நடிகர் தான் மெயின் வில்லன்

ஆனால் ஸ்ரீகாந்த் பலியாடுதான். அவரைத் தாண்டி மிகப்பெரும் நெட்வொர்க் இருக்கிறது. அவர்கள் தான் இந்த பொருளை சப்ளை செய்யும் டீலர்கள் என சுசித்ரா தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஒரு பெரும் புள்ளி தான் இந்த விஷயத்தை கிளறி விட்டுள்ளார். ஆனால் அவர்களுக்கு தேவையில்லாதவர்கள் மீதுதான் நடவடிக்கை பாயும். நெருக்கமானவர்கள் தப்பித்து விடுவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அது மட்டும் இன்றி ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் தான் இந்த விவகாரத்தின் மெயின் வில்லன். ஒரு நிழலுலக தாதா பின்னணியில் இவர் செயல்பட்டு வருவதாகவும் சுச்சி கூறியுள்ளார்.

வெளிநாட்டில் இந்த வேலைகளை பார்க்கும் அந்த நடிகர் கோலிவுட் பிரபலங்களுக்கு இதை பழக்கப்படுத்தி இருக்கிறார். அவருக்கு சொந்தமான வீட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகள் எல்லாம் கொட்டி கிடக்கிறது.

அதேபோல் பிரபலமான நடிகை ஒருவரும் இவருடன் கூட்டணி தான். அது மட்டும் இன்றி விஜய் சேதுபதி பெயர் கூட இதில் அடிபட்டு வருகிறது. அவர் மட்டுமல்லாமல் இன்னும் பலர் இருப்பதாகவும் சுசித்ரா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த சாக்லேட் பாய் ஹீரோவை போலீசார் பிடித்தால் மொத்த வழக்கும் முடிந்துவிடும். ஆனால் அது அவ்வளவு சுலபம் கிடையாது. அவர் சிக்கும் பட்சத்தில் அந்த நிழலுலக தாதா இவரை காப்பாற்ற மாட்டார் என்றும் நமக்கு தெரியாத பல விஷயங்களை சுசித்ரா கூறியுள்ளார்.

பாலிவுட்டில் சர்வசாதாரணமாக இருந்த இந்த மருந்தின் புழக்கம் கோலிவுட் பக்கம் வந்ததற்கே இந்த நடிகர் தான் காரணம். இவரையா மக்கள் தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் என சாட்டையடி கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

சித்திரை பிரபலங்கள் மத்தியில் பார்ட்டி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அதன் பின்னணியில் இப்படி எல்லாம் நடக்கிறதா என்றால் விஷயங்கள் ரசிகர்களின் மத்தியில் கடும் அதிர்வை இப்போது ஏற்படுத்தி இருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.