சின்மயி குரல் தான் வேண்டுமென அடம் பிடித்த 3 ஹீரோயின்கள்.. லோகேஷ் செய்த அப்பாடக்கர் வேலை – Cinemapettai

Tamil Cinema News

கடந்த சில காலங்களாக இருக்குமிடம் தெரியாமல் இருந்தார் பாடகி சின்மயி. சமீபத்தில் தக்லைஃப் படத்தில் இவர் பாடிய முத்தமலை பாடல் தான் இவரை மீண்டும் அனைவரது மனதிலும் ஆர்ப்பரித்து தேட வைத்துள்ளது. அந்த அளவிற்கு இவரது குரல் காந்தம் போல் இழுத்துள்ளது.

கவிஞர் வைரமுத்து பிரச்சனைக்கு பின்னர் சின்மயிக்கு பாடுகிற வாய்ப்பு குறைந்தது. இதனால் அவர் கணவருடன் ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். அங்கே பல பாடல்களையும், ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசுவதையும் வேலையாக செய்து வந்தார். அவரது கணவர் ராகுல் ரவீந்தர் அங்கே பல படங்களில் நடித்து வருகிறார்.

சின்மயி இங்கே தலை காட்டாவிட்டாலும் அவர்தான் டப்பிங் பேச வேண்டும் என மூன்று நடிகைகள் இன்று வரை அடம்பிடித்து வருகின்றனர். இதற்காக பல இயக்குனர்கள் ஐதராபாத் சென்று சின்மயியை டப்பிங் பேச வைத்துள்ளனர். அவரும் அந்த நடிகைகளுக்காக குரல் மட்டும் கொடுத்து வந்தார்.

திரிஷா: விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து இவருக்கு குரல், சின்மயி தான் கொடுத்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு கூட சின்மயி தான் டப்பிங் பேசியுள்ளார். லோகேஷ் கனகராஜ் ஹைதராபாத் சென்று அவரை பேச வைத்துள்ளார்.

சமந்தா: இதுவரை சமந்தா நடித்த அனைத்து படங்களிலும் சின்மயி தான் அவருக்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார். வேறு யாருடைய குரலும் தனக்கு செட்டாகவில்லை என இன்று வரை திரிஷா, சின்மயியை மட்டும் தான் பேச அனுமதித்துள்ளார். தங்க மகன், மெர்சல் போன்ற படங்களிலும் அவர்தான் இவருக்காக பேசியுள்ளார்.

இப்படி நயன்தாரா முதல் சமீரா ரெட்டி, காஜல் அகர்வால் போன்றவர்கள் வரை சின்மயி தான் குரல் கொடுத்து வருகிறார். தக்லைஃப் படத்தில் கூட பாடகி “தி” பாடிய வெர்சன் தான் படத்தில் இடம்பெறுகிறதாம். ஆனால் சின்மயி பாடலும் நன்றாகத் தான் இருக்கிறது என மணிரத்தினத்திடம் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.