சிறகடிக்க ஆசையில் சீதாவின் திருமணம்.. முத்து-மீனா இடையில் விரிசல் ஏற்படுமா.? – Cinemapettai

Tamil Cinema News

Vijay Tv : சீரியல் சிறகடிக்க ஆசை சீரியலில் ஆபத்தில் இருந்த பெண்ணின் உயிரை முத்து காப்பாற்ற, அதை தான் காப்பாற்றியதாக அருண் சொன்ன பொய் வெட்டவெளிச்சமாக தெரியவருகிறது. அருண் மற்றும் முத்துவிற்கு இடையே விரோதம் அதிகமாகிறது. முத்துவின் மனதை மாற்ற வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டுள்ளார் அருண்.

முத்து சீதாவை நீ பார்க்க கூடாது என கண்டித்தும். அருண், மீனா மற்றும் சீதாவை தனியாக சந்தித்து, இப்பொது இருக்கும் நிலையில் எனக்கும், சீதாவிற்கும் நீங்கள் தான் உதவ வேண்டுமென்று மீனாவிடம் கேட்டுள்ளார்.

மீனாவும் அருண் இல்லாமல் சீதா வாழமாட்டாள் என யோசிக்கிறாள். அதேசமயம் முத்துவை எதிர்த்து என்ன செய்ய முடியும் எனவும் யோசிக்கிறாள். இனிவரும் எபிசொட்டில் சீதா மற்றும் அருண் திருமணத்தை, முத்துவிற்கு தெரியாமல் மீனா நடத்தி வைப்பது போல் கதைக்களம் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முத்து, மீனா இடையே நடக்கும் சண்டை

ஆனால் முத்துவின் விருப்பம் இல்லாமல் மீனா இந்த திருமணத்தை நடத்தி வைப்பதால். முத்துவிற்கும் மீனாவிற்கும் இடையில் விரிசல் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தங்கைக்காக கணவனை எதிர்த்து அடியெடுத்து வைப்பாளா மீனா. பார்க்கலாம்!

இது ஒருபக்கம் இருக்க ரோகினி விஜயாவிடம் கொடுத்த செயின், திருட்டு செயின் என விஜயாவிற்கு தெரியவரபோகிறது. ரோகினியும் விஜயாவிடம் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்க போகிறாள். விஜயா, மனோஜ் மற்றும் ரோகினியை பிரிப்பதற்காக திட்டம் தீட்டுவது ரோகினிக்கு தெரியவர, ரோகினி பார்வதியின் உதவியோடு விஜயாவின் மனதை மாற்ற திட்டம் தீட்டுகிறார். யார் வலையில் யார் சிக்க போகிறார்கள் என தெரியவில்லை.

இதோடு மட்டுமல்லாமல் ரவி புது ஹோட்டல் ஆரம்பிக்க வேலை நடந்து கொண்டிருக்க, புது ஹோட்டலால் ரவிக்கும் ஸ்ருதிக்கும் இடையில் பிளவு ஏற்படுமா?அடுத்தவாரம் விறுவிறுப்பான கதைகளத்தோடு நகரபோகிறது சிறகடிக்க ஆசை.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.