தனம் – ருக்குமணியை அவமானபடுத்தும் சொர்ணவதி.. நிலா குட்டியின் கண்ணில் மூர்த்தியை பார்க்கும் ருக்கு – Cinemapettai

Tamil Cinema News

சண்முகத்தின் அம்மா லட்சுமி, ருக்வை அவமானபடுத்தியதால் மனம் உடைந்து தூக்கு போட முடிவு எடுக்கிறாள் ருக்மணி. சத்ரியன் கதவை உடைத்து ருக்மணியை காப்பாற்றுகிறான். லட்சுமி போன் செய்து திருமணம் நடக்கவில்லை என்ற விஷயத்தை சொர்ணாவிடம் சொல்கிறாள்.

சொர்ணா சந்தோசத்துடன் ஒரு கிஃப் வாங்கிகொண்டு ருக்மணியை பார்ப்பதற்கு தன் மகளுடன் செல்கிறாள். அங்கு சென்று நான் சீர்வரிசையுடன் கல்யாண வீட்டிற்கு வந்து இருக்கிறேன். ஆனால் நீங்கள் எல்லோரும் கல்யாணத்திற்கு ரெடியாகாமல் அழுதுட்டு இருக்கீங்க என்று கேட்கிறாள்.

தனம் சொர்ணாவை எல்லாம் தெரிஞ்சு தானே வந்து இருக்கீங்க என்று கேட்கிறாள். ஆமாம்! எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கிறேன், என் பொண்ணு இப்படி செய்திருந்தால் நான் உடனே தற்கொலை செய்து இருப்பேன்.

ஆனால் நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய் என்று சொர்ணா ருக்குவை பார்த்து கேட்டவுடன், சொர்ணாவை பார்த்து தனம் நிறுத்துங்க, நான் உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து பேசினால் நீங்கள் ஓவரா பேசுறீங்க என்றதும் சொர்ணாவின் மகள் எங்க அம்மாவை நீ எப்படி எதிர்த்து பேசலாம் என்கிறாள்.

தனம் அவளை பார்த்து உங்க அம்மா கிட்ட வாயால பேசுறேன் உன்னை நான் அடித்து விடுவேன். மரியாதையா நீங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று சொல்கிறாள். உடனே இரண்டு பேரும் கிளம்பிட்டாங்க.

இதற்கிடையில் திவாகர், சௌந்தர்யாவை மும்பை பார்ட்டிகிட்ட 15 லட்சத்திற்கு விலைக்கு பேசி கடத்துகிறான். சௌந்தர்யா மயக்கம் தெளிந்து நான் எங்க இருக்கிறேன் என்று திவாவிடம் கேட்கிறாள்.

நான் உன்னை மும்பை பார்டியிடம் விற்றுவிட்டேன். நீ இன்று ராத்திரி டுபாய் போய் விடுவாய். அங்கு வசதியா வாழ்ந்துகோ என்று சொல்லலிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறான். சௌந்தர்யா நாம் பெரிய தப்பு பண்ணிவிட்டோம் என்று தனது தவறை ரியலைஸ் செய்கிறாள்.

தனத்தோட பிரண்ட்ஸ் எல்லோரும் சௌந்தர்யா இப்படி பண்ணிட்டாளே என்று பேசிக் கொண்டேயிருக்கும் போது நிலா பாப்பா குடும்பம் ருக்குவுக்கு ஆறுதல் சொல்ல வர்றாங்க. நிலாவை பார்த்து தனம் சாப்பிட்டாயா நிலா குட்டி என்று கேட்கிறாள். ம்ம் சாப்பிட்டேன், நீங்கள் சாப்பிட்டீங்களா என்று நிலா கேட்கிறாள்.

உடனே எல்லோரும் வீட்டிற்குள் செல்கிறார்கள். ருக்குமணி அழுவதை பார்த்து நிலாகுட்டி நீங்க அழுவாதீங்க பாட்டி, அழுதால் கண்ணு வழிக்கும் என்று கூறுகிறாள். உங்க வீட்டில் ஏதோ பிரச்சினை அதான் நீங்க எல்லாரும் சோகமாக இருக்கீங்க என்று அத்தையும் பாட்டியும் சொன்னாங்க. கவலைபடாதீங்க பாட்டி எல்லாம்.

சரியாயிடும், தைரியமா இருங்க என்று நிலா சொன்னவுடன் ருக்குமணியின் கண்களில் இழந்த நம்பிக்கையின் ஒளி மீண்டும் மெல்ல மறையாமல் தென்படத் தொடங்குகிறது. நிலா குட்டியின் வார்த்தைகளும் அவளுடைய தைரியமான நடையும், பாட்டியின் மனதில் ஒரு நிம்மதியை ஏற்படுத்துகிறது.

அடுத்த நிமிஷம், ருக்குமணிக்கு கணேசமூர்த்தியின் உருவம் நிலாவின் கண்ணில் பளிச்சென்று தெரிகிறது. அந்த பார்வையைப் பார்த்த ருக்குமணிக்கு ஒரு எதிர்பார்ப்பு புனித நம்பிக்கையாக உடனே தோன்றுகிறது – இப்போ என்ன நடந்தாலும் சரி, இந்தச் சின்னப் பிள்ளை நம்ம குடும்பத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறாள்! என்று ருக்குமணி நினைக்கிறாள்.

இன்றைய புரோமிவில் சௌந்தர்யா கையில் போன் கிடைத்து தனத்திற்கு போன் அடிக்கிறாள். தனம் சௌந்தர்யா இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பாளா? சௌந்தர்யாவை காப்பாற்றுவாளா? இனி என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.