Dhanush-Vetrimaaran: வெற்றிமாறன், சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தை தாணு தயாரிக்க இருக்கிறார். இதற்கான ப்ரொமோஷூட் எடுக்கப்பட்ட நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளிவர உள்ளது.
இதை அடுத்து டைட்டில் வீடியோ என பல அப்டேட் இருக்கிறது. ஆனால் திடீரென இந்த படத்திற்கு ராயல்டி கேட்டு தனுஷ் 20 கோடி டிமாண்ட் செய்ததாக செய்தி பரவத் தொடங்கியது.
உடனே சினிமா விமர்சகர்கள் இதை ஊதி பெரிதாக்கி தனுஷ் மீது ஒரு நெகட்டிவ் பிம்பத்தை உருவாக்கி விட்டனர். இதற்கு இடையில் சிம்பு ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன.
வெற்றிமாறன் விளக்கம்
உடனே ட்ரோல் கமெண்ட்ஸ் பரவ தொடங்கியது. இதற்கு தனுசு ரசிகர்கள் பதிலடி கொடுப்பது என சோசியல் மீடியா ஒரே ரணகளமாக இருக்கிறது.
இந்நிலையில் வெற்றிமாறன் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது சிம்புவை வைத்து படம் பண்ண போகிறோம் என்று பேச்சுவார்த்தை நடந்த மறுநாளே தனுசுக்கு போன் செய்தேன்.
இப்படி ஒரு விஷயம் இருக்கிறது. இந்த படம் வடசென்னை யூனிவர்சில் வரலாம். அப்படி இல்லை என்றால் அதற்கு சம்பந்தமில்லாமல் வேறு ஒரு படமாகவும் என்னால் எடுக்க முடியும்.
ஏனென்றால் இதன் உரிமை உங்களிடம் இருக்கிறது. அதனால் உங்கள் விருப்பம் தான் இங்கு முக்கியம் என சொல்லி இருக்கிறார். ஆனால் தனுஷ் உங்களுக்கு எப்படி எடுக்கணுமோ தாராளமா எடுத்துக்கங்க ஒரு பைசா கூட எனக்கு வேண்டாம்.
என்னிடம் காப்பி ரைட் இருக்குதுன்னு தயக்கப்படாதீங்க. வடசென்னை யுனிவர்ஸில் வரணும்னா அப்படியே எடுங்க என சொல்லி இருக்கிறார். ஆனால் யூடியூப் சேனலில் இப்படியெல்லாம் நியூஸ் வருவது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
தனுஷ் இது சம்பந்தமா காசு கேட்கவில்லை என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ஆனாலும் சிம்பு ரசிகர்கள் தனுஷ் தான் கட்டாயப்படுத்தி இப்படி ஒரு இன்டர்வியூ கொடுக்க வைத்திருக்கிறார் என வேறு ஒரு பிரச்சனையை கிளப்பி வருகின்றனர்.