தேர்வுக்குழு மீது அதிருப்தியில் சவ்ரவ் கங்குலி.. இங்கிலாந்துக்கு கட்டம் கட்டிய கௌதம் கம்பீர் – Cinemapettai

Tamil Cinema News

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக நீண்ட தொடர் வருகிற ஜூன் 20ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இப்பொழுது இங்கிலாந்து செல்ல உள்ள இந்திய அணி தான் கங்குலியை மிகவும் அதிருப்திப்படுத்தியுள்ளது.

மூத்த வீரர்கள் ஓய்வுக்கு பின் இந்தியா பங்கு பெறும் தொடர் இது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்று விட்டனர். இதனால் இங்கிலாந்து அணியை இந்தியா எப்படி சமாளிக்கும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

அணியில் நான்கு வருடங்களுக்குப் பின் கருண் நாயர் இடம் பெற்றுள்ளார்.அவர் அங்கே பயிற்சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருந்தாலும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சப்ராஸ்கான் போன்ற வீரர்களை எடுக்காததால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி தேர்வு குழு மீது காட்டும் காட்டி வருகிறார்.

பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் இந்திய அணி வெற்றி பெறும். சமீபகாலமாக நன்றாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயரை அணியில் எடுக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. அது மட்டுமில்லாமல் பும்ரா 5 போட்டிகளை விளையாட மாட்டார் என்ற செய்தியும் அபத்தமானது என கங்குலி கூறி வருகிறார்.

தற்போது இங்கிலாந்தில் பயிற்சி ஆட்டம் விளையாடி வரும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் பயிற்சியாளர் கௌதம் கம்பீர். இஷ்டத்துக்கு ஆடுகளம் கொடுக்கக் கூடாது, இந்திய அணி விளையாடும் ஆடுகளம் தான் எங்களுக்கு வேண்டும் என இங்கிலாந்துடன் மல்லுக்கட்டி ஜெயித்துள்ளார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.