நிலாவின் சுயநலத்தால் கேள்விக்குறியான சேரன் வாழ்க்கை.. சோழன் சொன்ன பொய், உளறிய நடேசன் – Cinemapettai

Tamil Cinema News

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கும் கார்த்திகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று நிலா முடிவு பண்ணினார். அதனால் சேரனை மாப்பிள்ளை மாதிரி ரெடி பண்ணி கோவிலுக்கு கூட்டிட்டு வந்து விட்டார்கள். அப்படி வந்ததுல இருந்து சேரன், நிலா, சோழன், பாண்டியன் மற்றும் பல்லவன் அனைவரும் கார்த்திகாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் கார்த்திகா வெளியே வராதபடி கார்த்திகாவின் அம்மா லாக் பண்ணியதால் கோவிலில் காத்துக் கொண்டிருந்தவர்கள் கடைசியில் ஏமாற்றம் அடைந்து வீட்டிற்கு வந்து விட்டார்கள். இதனால் மணமுடைந்து போன நிலா அழுது கொண்டே சேரனிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் சேரன் இது ஒரு பெரிய விஷயம் இல்லை. நாம் குடும்பத்துடன் கோவிலிலிருந்து பிரார்த்தனை பண்ணினோம் என்று நினைத்துக் கொள்ளுவோம் என்று நிலாவை சமாதானப்படுத்தி விட்டார்.

ஆனாலும் சோழனும் ஏதாவது நிலாவிடம் பேசி ஆறுதல் படுத்த வேண்டும் என்று தனியாக கூட்டிட்டு போகிறார். அப்படிப் பேசும்பொழுது என்னுடைய குடும்பத்தின் மீது உங்களுக்கு ரொம்ப அக்கறையாக இருக்கிறதை பார்க்கும் பொழுது சந்தோசம் என்று சொல்கிறார். அதற்கு நிலா நான் எப்படியும் இந்த வீட்டை விட்டுப் போய்விடுவேன். அப்பொழுது யாரும் இந்த குடும்பத்தில் பெண்கள் தங்காத வீடு என்று சொல்லிட கூடாது.

அதனால் மற்றவர்கள் எல்லாத்துக்கும் கல்யாணம் நடந்து விட்டால் மூன்றாவது மருமகள் சண்டை போட்டு வீட்டை விட்டு போய்விட்டார் என்று ஊர் பேசிவிடும். அதற்காகத்தான் சேரன் அண்ணாவுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முயற்சி எடுத்தேன் என சொல்கிறார். அப்படி என்றால் நீங்கள் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்பதற்காகத்தான் இதெல்லாம் பண்ணுறீங்களா என்று சோழன் கேட்கிறார்.

அதற்கு நிலா இதுவும் ஒரு காரணம் என்று சுயநலத்தால் பதில் சொல்கிறார். அடுத்ததாக சேரன் நண்பனுக்காக சோழனிடம் கார் வாடகை குறைத்து கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் சோழன் கட்டுப்படியாகது என்று சொல்லிய பொழுது நிலா நீங்கதான ஓனர். உங்க அண்ணனுக்காக இது கூட பண்ண மாட்டீங்களா என்று கேட்ட பொழுது அங்கு இருந்த நடேசன் இவன் எங்க ஓனர்.

இவன் வெறும் வேலை பார்க்கிற ஒரு டிராவல்ஸ் டிரைவர் என்று சொல்லிவிடுகிறார். இதை எதிர்பார்க்காத நிலா இதுலயும் என்னிடம் பொய் தான் சொல்லி இருக்கிறீர்களா என்று கோபப்பட்டு பேசுகிறார். நடேசன் உண்மையை சொன்னதால் சோழன் சொன்ன எல்லா பொய்யும் நிலாவுக்கு தற்போது தெரிந்து விட்டது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.